Sunday, December 26, 2010
தவிக்கும் இதயத்துள்
தனிமை நெருப்பாய் சுட்டுவிட
தனிமையிலும்
தவறவில்லை உன் நினைவுகள்
தள்ளி நீ சென்றாலும்
தவிக்குது என் மனம்..
தடைகள் பல கடந்து
தன்னம்பிகையாய் நேசம் கொண்டேன்
தவிக்க விடுவாய் என அறியாமல்
தவித்து இருப்பது சுகமென இருந்தேன்
தலை கோதி நீ ஆறுதல் தரும்
தருணத்திற்காக...
தவித்திருக்கிறேன்
தனித்திருக்கிறேன் தினமும்
தலை கோத நீ இல்லை..
தவிக்க வைப்பதில் சுகமா உனக்கு...
தன்னம்பிக்கையை
தளர வைத்து விடாதே..
தவிப்பது என் மனம்மட்டுமல்ல
தவிக்கும் இதயத்துள்
துடித்து கொண்டு இருப்பது
நீயும் தான்....
Monday, December 13, 2010
பிரிந்த பின் என் பாசம்
Monday, November 29, 2010
சொர்க்கத்தில்...
Friday, October 22, 2010
என் நேசத்தை
என் நேசத்தை
உனக்கு உணர்த்த
என் மௌனத்தை தவிர
வேறு மொழி
என்னிடம் இல்லை...
உன்னை நேசிக்கும்
ஒவ்வொரு நொடிகளும்
கரைந்து போகாமல்
என்னுள்
உறைந்து போயின...
என் கன்னம் வருடி
என் கண் பார்த்து
நீ பேசும்
அந்த நொடி வேண்டும்
மறுபடியும்....
என் கண்ணீர் துடைக்கும்
உன் கரங்களுக்கு
முத்தமிட்டு மகிழும்
தருணத்தில்
என் துக்கத்தின் வலி
பஞ்சாய் பறந்திட வேண்டும்...
Thursday, October 14, 2010
எனக்காக பிறந்தவனே
எனக்காக பிறந்தவனே
என்னுள் கலந்தவனே
கண்கள் உன்னை
கண்டதால் தானோ
என்னுள் நுழைந்தாய்...
என்னுள் நீ வந்ததால்தனோ
புதிதாய் பிறந்தேனோ
மரிக்காமல் ஜனனம் தந்தவனே
உன்னை மட்டுமே
நேசிக்கும்
என் இதயத்திற்கு
மூச்சு காற்றாய்
வந்து விடு ...
உன்னை நேசித்து
சுவாசிக்கும் வரத்தை
தந்து விடு....
உன்னோடு இருக்கும்
அழகிய தருணம்
அழகாய் தொடரவேண்டும்..
என் சந்தோசம்
முடியும் தருணம்
என் உயிர்
உன் மடிதனில்
பிரிந்திட வேண்டும்...
Thursday, August 5, 2010
நீ நேசிக்க மறக்கும்
Wednesday, July 28, 2010
விதைத்து விட்டாய்...
உன் கண்களுக்குள்
கைதியாய் நான்..
கைதியாய் நான்..
என்றைக்கு
விடுதலை செய்வாய்..
எனக்கும்
இடம்மாற்றம் வேண்டும்..
உன் கண்களில் இருந்து
இதயத்திற்கு நிரந்தரமாய்...
விடை சொல்லமுடியாத
உன் கண்களில் இருந்து
இதயத்திற்கு நிரந்தரமாய்...
விடை சொல்லமுடியாத
கேள்வியாய்
நீ பார்க்கும் பார்வை
இருக்கும் பொழுது
என்னிடம் மட்டும்
என்ன பதிலை
எதிர் பார்க்கிறாய்??
ஒவ்வொரு முறையும்
உன்னருகில் ஊமையாய்
வார்த்தையின்றி தவிக்கிறேன்
என்னை தூக்கி எறிந்ததாய்
என்னை தூக்கி எறிந்ததாய்
கருதவில்லை நான்..
என்னை உன்னுள்
விதைத்து விட்டாய்...
உன்னுள் நான் வளருவேன்
காதல் விருட்சமாய்...
உன்னில் தொலைத்த
என் நிஜத்தை
தேடுகிறேன்...
என் தேடலில்
கிடைப்பது எல்லாம்
தோல்வியே..
உன்னில் தொலைத்த
என் நிஜத்தை
தேடுகிறேன்...
என் தேடலில்
கிடைப்பது எல்லாம்
தோல்வியே..
Friday, July 23, 2010
எனக்கே எனக்கு....
கடந்த காலம்
கசப்பாய் கடந்து விட
நிகழ் காலம்...
நெருப்பாய் சுட்டுவிட
எதிர்காலம்...
கவலையில் கலங்கிவிட..
அனாதையாய் பல நாட்கள்
தனிமையில் சிதைந்து விட...
சொந்தமாய்
என் சொந்தமாய்
எதுமே இல்லாத போதும்...
தோல்வியில்
துவண்டு துடித்த
என்னை
தோள் கொடுத்து
தூக்கி நிறுத்தி...
ஆதரவாய் ஆறுதல்
வார்த்தை பேசி
என் கிறுக்கல்களையும்
ரசித்து....
என் உயிர் மூச்சில் கலந்து
இன்றும் என்னை நேசித்து
என் துயர் மாறாக செய்யும்
என் உறவே..
என் நட்பு
தோட்டத்துக்குள்
வந்து போகும் பறவையே..
உன் நட்பில் துயர் மறக்கிறேன்...
உன் சிரிப்பில்
என் கண்ணீரை மறைக்கிறேன்
துயர் துடைக்கும்
உன் கரங்களுக்கு
என் ஆயிரம் முத்தங்கள்..
என் நட்பே!!!
எனக்கும் மட்டும்
உன் அன்பை தந்துவிடு...
பாசத்தை பகிர்ந்து தருவது
அன்னையாக மட்டுமே
இருந்து போகட்டும்
உன் பாசம் எனக்கே எனக்கு
மட்டுமே வேண்டும்....
Tuesday, July 20, 2010
Wednesday, July 14, 2010
காதலித்து பார்...
காதலித்து பார்
கவிதை வரும்
காதலிப்பவர்களின் சொல்...
கவிதை எழுத மட்டுமே நினைத்தேன்
காதல் கொள்ளவில்லை..ஏனோ
கவிதை வராமல் போனது அன்று..
காதல் என்றால் வெறும்
கனவு உன்னை
காணாத வரை...
கண்டேன் உன்னை...
கண்டுகொண்டேன் என்
காதலை....
கனவு காதலானோ என்று
கண் விழித்து பார்த்தேன்
கண் முன்னே நீ..
கனவு அல்ல நிஜம்தான்...
கண்கள் காட்டிய முதல்
காதல் நீ...
கவிதை எழுத நினைக்கவில்லை...
காகிதம் கண்டவுடன் எழுதுவது எல்லாம்
கவிதையாகி போனது இன்று...
காதலர்களின் கூற்று உண்மை தானோ???
கள்ளம் இல்லா உன் அன்பு
காதல் கொள்ள செய்தது...
காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
காத்திருக்க வைத்தாய்...
காத்திருக்க வைப்பததால் உன்னை
காதலிக்க சொல்கிறது மனது...
காத்திருப்பது பிடிப்பது இல்லை முன்பு..
கால் கடுக்க
காத்திருந்தாலும் வெறுக்க வில்லை
காதல்...
காத்திருப்பது கூட சுகம் தானோ???
கண்ணோடு
கண் சேர்த்த என்
காதலனே.. கண்ணாளனே
கனவிலும் என் நினைவிலும்
காதலனாய் என்றும்
என் கண்ணாளனாய்
காலம் முழுக்க தொடரவேண்டும்
காதல் நம் காதல்...
Monday, July 12, 2010
உன்னோடு வாழ்ந்தால்...
உன்னோடு வாழ்ந்தால்
அவ்வாழ்க்கை
மட்டும் தான் நிஜம்...
வாழ இயலா நிலை...
வாழ துடிக்கும் மனது....
தினமும் வாழ்கிறேன் கனவில்.......
தலையணை மந்திரம்
அறிந்தேன் நான்....
தலையணையாய் நீ!!!
தூங்க முடியாமல் நான்....
என்ன மந்திரம் போட்டாய்........
என் பெயரை
நொடிக்கு ஒரு முறை
நீ அழைக்கிறாய்.....
ஒவ்வொருமுறையும்
செத்து செத்து பிழைக்கிறேன்
உன் குரலின் வசியத்தால்...........
இதயம் கனக்கிறது
உன்னை தாங்க இயலவில்லை
என் இதயத்தால்....
நான் பேசும் வார்த்தைகளை
நீ ரசிப்பாய் என்றாய்
இப்போது வார்த்தை
தேடி அலைகிறேன்
வெட்கத்தால்....
மீண்டும் அவ்வார்த்தைகளை
பேச இயலாமல்...
உன்னை வந்து சேர.....
தண்ணீர் ஊற்றி
வளர்க்கவில்லை
உன் மீது காதலை...
கண்ணீரில்
கரைந்து விடாமல்....
உன் நினவுகளை கொண்டு
நிஜமாய் வாழ்கிறேன்....
உன் காதலுக்காய்...
காதலை சொல்வதற்கு
தயக்கம் எனக்கு...
சொல்ல இயலவில்லை....
சொல்ல துணிவும் இல்லை
சொல்லி பயனும் இல்லை..
பூர்வ ஜென்மம்
பந்தம் போல
என்னை தொடரும்
உன் நினைவுகள்....
ஏதோ ஒரு வலி
உன்னை காணும் போது...
கிடைக்காது என்று தெரிந்தும்
நினைக்காமல்
இருக்க இயலவில்லை....
மறுபிறவி வேண்டுகிறேன்...
மீண்டும் பெண்ணாய் பிறக்க......
அப்போதாவது
என்னை ஏற்றுக் கொள்......
அணு அணுவாய்
ரசித்து வாழ வேண்டும்
உன்னோடு....
மறுபிறவி
கிடைக்கும் என்றால்...
நாளைக்கூட மரணிப்பேண்...
உன்னை வந்து சேர.....
தோள் சாய உன்...
பாசத்துக்காய்
ஏங்கும் நெஞ்சம்
உயிர் மட்டும் இருக்க
உணர்வுகள்
செத்துப் போயின...
கதறி அழ
துடிக்கும் மனது
கண்ணீர் மட்டும்
வரவில்லை....
கனவிலும்
நினைக்காத நரகம்
இந்த தனிமை...
தனிமையில்
சந்தோஷமாய் இருந்தேன்
சில காலம்...
இன்று தனிமையின்
வெறுமை சுடுகின்றது
என் உள்ளத்தை....
இருட்டுக்குள் இருந்து
வெளிச்சம் நோக்கி
என் கரம்...
ஆறுதல் சொல்ல
நீ வேண்டும் ...
தலை கோதி...
நெற்றியில் முத்தம் இட்டு,
ஆறுதலாய் வறுட
உன் கரம் வேண்டும்...
தோள் சாய
உன் தோள் கொடு...
சிறிது நேரம்
என் துக்கம் மறந்து
தூங்கி கொள்கிறேன்..
நட்பால் மட்டுமே
உயிர் வாழ்கிறேன்...
நட்பே என்றும்
எனக்கு மட்டுமே
நட்பாய் இரு....
கற்பனை சந்தோஷம்....
உன்னை நினைத்து
நிறைய எழுதி
வருகிறேன்
எல்லாவற்றிலும்
நீ அன்பாய் இருப்பது
போல தான்...
கற்பனையில் எல்லாம்
நிறைய அன்பு
கிடைக்கிறது
உன்னிடமிருந்து ...
ஆனந்த கண்ணீர் என்னிடம்.... நிறைய எழுதி
வருகிறேன்
எல்லாவற்றிலும்
நீ அன்பாய் இருப்பது
போல தான்...
கற்பனையில் எல்லாம்
நிறைய அன்பு
கிடைக்கிறது
உன்னிடமிருந்து ...
பாசத்துக்கு
ஏங்கும் பறவையாய்
உன்னை சுற்றி என் மனம்....
சந்தோஷம்...
வெறும் கற்பனையாகவே
முடிவதை
தாங்க முடிவது இல்லை
என்னால்
சந்தோஷம் கிடைக்கும்
வாழ்க்கையில் தானாம்.....
எனக்கும் வேண்டும்
சந்தோஷமான வாழ்க்கை
வேறு வாழ்க்கை அல்ல....
உண்டாகும்
சந்தோஷ வாழ்க்கை......
அது வரை
என் கற்பனை
சந்தோஷம் தொடரும்......
என்னுள் ஏமாற்றம்...
உன்னில் மாற்றம்
என்னுள் ஏமாற்றம்
இன்றும்
ஒரே மானநிலையில் நான்
நீ மட்டும் ஏன் மாறிவிட்டாய்???
பாசத்திற்கு அளவில்லை
அன்று...
பாசமே இல்லாததை போல
உணர்கிறேன் இன்று..
தனிமையில்
தவிப்பதாய் ஒரு கலக்கம்..
தினமும் தூங்க வைப்பாய்..
துயில் எழுப்ப மறப்பதும் இல்லை...
இன்று????
உனக்கு நேரம் இல்லையோ
என்னை நினைக்க கூட...
தினமும் எழும்புகிறேன்
ஏமாற்றத்தோடு...
அமைதியாய் இருந்தேன்
என்னுள் அமைதி இல்லை..
பேசுவதை கூட குறைத்து
மீண்டும் பாசத்தை தேடி
உள்ளம் பரித்தவிக்குது
உன்னால்...
எனக்கே எனக்கு என்று
உன்னை நினைத்தது தான்
என் பிழையோ???
யாரிடமும் விட்டு கொடுக்க
மனம் இல்லை..
என்னை மட்டும்
ஏன் விட்டாய் நீ???
பிரிவு எல்லோருக்கும் வரும்...
பின்னாளில் பிரியப் போவதற்கு
இந்நாளில் ஒத்திகை ஏன்???????
உன்னை மட்டும்..
நெஞ்சுக்குள் ஏக்கத்தையும்
கண்ணுக்குள் காதலையும்
இதயத்தில் நெருக்கத்தையும்
என் சுவாசத்தில்
உன் வாசத்தையும்
உன் வசமாய் வாழும்
வாழ்க்கை போதும்..
உன் அன்பால் வாழும்
வாழ்க்கை போதும்...
நீ தூரமே இருந்தாலும்
என் இதயத்தில்
நெருக்கம் ஆனாய்..
என் இதயத்தை இறுக்கும்
உன் நினைவுகள்
இறுக்கமாகும் நினைவுகள்
இதமாய் போனது இன்று..
கண்ணில் வழியும் நீர்..
துடைக்கும் கைகளாய் நீ..
வேறென்ன வேண்டும்???
தூக்கத்தை கலைக்கும்
உன் கனவுகள்
தூங்க மறுக்கும் விழிகள்!!!
எல்லாவற்றையும்
எளிமையாக எடுத்துகொண்டேன்
உன்னை மட்டும்
என் மனதில்
வலிமையாக வைத்துகொண்டேன்
வலிமையின் வலியிலும்
வழி தவற வில்லை
உன் வழியில்
என் வழி
இணையும் வரை
காத்திருப்பேன்....
உனக்காக மட்டுமே
காத்திருப்பேன்...
கலங்கிய கண்களோடு...
மெய்யான சுகம்..
"காதல் கவிதைகள்"
பைத்தியங்களின் உளறல்...
சிரித்து கேலி செய்தேன்...
முதன் முதலாய்
நானே பைத்தியமாய்
திரிந்தேன்..
உனக்காக கவிதை எழுத
நினைத்த போது...
என்னை நினைப்பதை
குறைத்தேன்
உன்னை நினைப்பதையே
ரசித்தேன்..
என்ன மாயம் செய்தாய் நீ...
விளங்க முடியாமல் நான்...
உன் மீது எனக்கு
உண்டான காதலை சொல்ல
இந்த ஆயுள் போதும் என்று
கருதவில்லை நான்...
என் ஆயுளை சேர்த்து
நீ வாழ்ந்து பார்
என் அன்பின் ஆழம்
நீ உணருவாய்....
என் உயிர் நீயாகி போனதால்
யாரிடமும்
சொல்ல முடியாமல் நான்..
நீ பேசிய வேளையில்
தொலைந்து போனது
எனது உயிர்..
தூங்கும் முன்
நினைத்து கொள்வேன்
என் வாழ்க்கை
யாரோடு என்று???
இன்று தூங்கும் போது
நினைக்கிறேன்
என் வாழ்க்கை உன்னோடு
மட்டும் தான் என்று...
இது வரை உணரவில்லை
உண்மை சந்தோசம் எதுவென்று???
உன்னோடு இருந்த
ஒவ்வொரு மணி துளிகளும்
உணர்த்தியது
உண்மை சந்தோஷம்
இது தான் என்று....
உன்னோடு பேசும்
நேரங்களில்
மணித்துளிகள் எல்லாம்
பனித்துளியாய் கரைகின்றன...
நீ இல்லாத பொழுதுகளில்
நேரம் போகாமல் என்னை
நிந்தனை செய்து துடிக்க
செய்கிறன...
காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
என்னை காக்க வைத்தாய்..
நீ காக்க வைப்பதாலேயே
உன்னை காதலிக்கிறேன் நான்...
முதன் முதலாய்
என் பெண்மையை
உணர்த்தியவன் நீ ...
மெய்யோடு மெய் சேர்வது
சுகம் இல்லை...
உண்மை காதலொடும்
உன்னோடு
உனக்காக
உனக்காக மட்டுமே
வாழும் சுகம் வேண்டும் எனக்கு...
அதுதான் மெய்யான சுகம்..
பைத்தியங்களின் உளறல்...
சிரித்து கேலி செய்தேன்...
முதன் முதலாய்
நானே பைத்தியமாய்
திரிந்தேன்..
உனக்காக கவிதை எழுத
நினைத்த போது...
என்னை நினைப்பதை
குறைத்தேன்
உன்னை நினைப்பதையே
ரசித்தேன்..
என்ன மாயம் செய்தாய் நீ...
விளங்க முடியாமல் நான்...
உன் மீது எனக்கு
உண்டான காதலை சொல்ல
இந்த ஆயுள் போதும் என்று
கருதவில்லை நான்...
என் ஆயுளை சேர்த்து
நீ வாழ்ந்து பார்
என் அன்பின் ஆழம்
நீ உணருவாய்....
என் உயிர் நீயாகி போனதால்
யாரிடமும்
சொல்ல முடியாமல் நான்..
நீ பேசிய வேளையில்
தொலைந்து போனது
எனது உயிர்..
தூங்கும் முன்
நினைத்து கொள்வேன்
என் வாழ்க்கை
யாரோடு என்று???
இன்று தூங்கும் போது
நினைக்கிறேன்
என் வாழ்க்கை உன்னோடு
மட்டும் தான் என்று...
இது வரை உணரவில்லை
உண்மை சந்தோசம் எதுவென்று???
உன்னோடு இருந்த
ஒவ்வொரு மணி துளிகளும்
உணர்த்தியது
உண்மை சந்தோஷம்
இது தான் என்று....
உன்னோடு பேசும்
நேரங்களில்
மணித்துளிகள் எல்லாம்
பனித்துளியாய் கரைகின்றன...
நீ இல்லாத பொழுதுகளில்
நேரம் போகாமல் என்னை
நிந்தனை செய்து துடிக்க
செய்கிறன...
காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
என்னை காக்க வைத்தாய்..
நீ காக்க வைப்பதாலேயே
உன்னை காதலிக்கிறேன் நான்...
முதன் முதலாய்
என் பெண்மையை
உணர்த்தியவன் நீ ...
மெய்யோடு மெய் சேர்வது
சுகம் இல்லை...
உண்மை காதலொடும்
உன்னோடு
உனக்காக
உனக்காக மட்டுமே
வாழும் சுகம் வேண்டும் எனக்கு...
அதுதான் மெய்யான சுகம்..
என் இதயம் உன்னிடத்தில்..
என் காதலை
உணர்த்த சொல்லி
உனக்காக இதயத்தையும்,
விழிகளையும் வானையும்,
தென்றலையும் நிலவையும்
பறவைகளையும், பூக்களையும்
தூதுவிட்டேன்...
பூவானது வாடி வந்து
சொன்னது நீ
மறுத்து விட்டாய் என்று..
கலங்கி போய்
வந்தன கண்கள்..
உணர்ந்து கொண்டேன்..
வான் இருண்டு போனது
நீ துரத்திவிட்டதால்..
நிலவானது தேய்ந்து போனது
நீ பாராமுகமாய்
அனுப்பிவிட்டதால்..
எனக்கு காரணம்
சொல்ல தெரியாமல்
தென்றலோ திசை மாறி
சென்று விட்டது..
பறவையோ
சோகமாய் வந்தது..
இதயம் மட்டும்
தூதாய் போய்
இன்றும் வர மறுக்கிறது
ஒரு வேளை
என் இதயத்தை மட்டும்
வைத்து கொண்டு
எல்லாவற்றையும்
திருப்பி அனுப்பி விட்டாயோ!!!!
இதே நினைவில்
வாழ்கிறேன் நான்...
என் இதயம்
உன்னிடத்தில்
தஞ்சமாய் இருப்பதால்.....
எங்கே இருக்கிறாய்
எங்கே இருக்கிறாய்
நீ..????
காணும் இடங்களில்
எல்லாம் உன் முகம்
மின்னலாய் வந்து
மறையும் மாயம் என்ன??
என் வீட்டைக் கடந்து
போகும் வாகனத்தின்
ஒளியைக் கேட்டு
ஓடி வந்து பார்த்து
ஏமாற்றம்...
மரக்கிளையில்
கொஞ்சி மகிழும்
பறவைகள்...
என் மனம்
பொறாமையில் தவிக்க..
சொல்ல முடியா வகையில்...
கோபம் உன் மேல்...
வேண்டாம் என்றேன்
என்னுள் வந்தாய்
வேண்டி நிற்கிறேன்
என் கண்ணை விட்டு
எங்கே மறந்தாய்...
கண்களை மூடினால்
ஒரு இருட்டு...
இருட்டினில் ஒளியாய்
உன் முகம்...
உன் முகம் பார்த்தே
தூங்கி கொண்டு இருக்கிறேன்
விடியல் பிடிக்கவில்லை..
உன்னை கண்ணில் இருந்து
விரட்டும் இவ்விடியல்
எனக்கு மட்டும் வேண்டாம்...
உனக்காக காத்திருக்கிறேன்..
உன் உயிரை கொண்டு
உன்னோடு வாழும்
வரம் வேண்டும்..
என் உயிரை தருகிறேன்...
உன்னோடு வாழ...
உன்னை மட்டும்
தந்து விடு எனக்கு...
Friday, June 11, 2010
என் இதயம்
ஒவ்வொரு நாளும்
உன்னை நினைத்தே
என் நிமிடங்கள்
கரைகின்றது.....
உன்னோடு பேச
எண்ணி ஓயாமல்
உன் எண்களை அழுத்தி
கைபேசியில் அச்சுக்கள்
அழிந்தே விட்டன....
அழிந்து போனது
அச்சுக்கள்
மட்டுமே...
என் மனதில்
அழியாமல்
உன்னை சுமந்தே
தனிமையாய் செல்கிறது
என் நாட்கள்....
நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்கள்
மணித்துளிகளாகி
நாட்கள் ஓடி
வருடம் கூடி
இன்னும் குறையவில்லை
உன் மீது எனக்கு
உண்டான காதல்....
என் இதயத்துடிப்பின்
ஓசையில்
உன் பெயர் ஒலிக்கும்....
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயரை
முத்தமிட்டே
என் இதயம் உயிர் பெறும்
உன்னை மட்டுமே
நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்....
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் இறுதி வரையிலும்....
என் உயிரே!!!
சீக்கிரம் வந்துவிடு....
உன் மார்பில் முகம்
புதைத்து அழுது
என் துன்பம்
மறக்கவேண்டும்
ஆதரவாய் நீ
தலை கோதும்போது
என் ஆயுள் போகவேண்டும்...
உன் மடியினிலே
என் ஆயுள் போகவேண்டும்...
பாசத்தை தேடும்
பாசத்தை தேடும்
மனது...
பழகிய போது
பாசம் தந்து
காயப்பட்ட மனதிற்கு
கனிவாய் பேசி
கவலை மறக்க செய்தாய்
பரிதவிக்கும்
மனதுக்கு பக்குவமாய்
ஆறுதல் அளித்தாய்...
இன்றும் ஆறுதலை
தேடி அலைகிறேன்...
பாசம் தர மறுத்தாலும்
தாங்கிக் கொள்வேன் ...
என்னை விட்டு
விலகி நின்று
உன்னால் நான்
புறக்கணிக்க படுவதை
தாங்கி கொள்ளும்
இதயம் என்னிடம் இல்லை...
எதையும் தாங்கும் இதயம்
எல்லோருக்கும் உண்டாம் ...
இதையும் தாங்கும்
இதயத்தை
எனக்கு மட்டும்
தந்துவிடு இறைவா....
Thursday, June 10, 2010
Sunday, April 18, 2010
என் செல்லமே!!
கருவில் சுமக்கவில்லை
என் நெஞ்சத்தில்
கருவில் சுமக்கவில்லை
என் நெஞ்சத்தில்
சுமக்கிறேன்..
எனக்காக விட்டு சென்ற
ஓவியம் நீ!!
என் வாழ்கையின்-அர்த்தம் நீ!!
என் வாழ்வே நீயாகி போனாய்!!
உனக்காக வாழும்
என் வாழ்கையின்-அர்த்தம் நீ!!
என் வாழ்வே நீயாகி போனாய்!!
உனக்காக வாழும்
வாழ்வே போதும் எனக்கு!!!
உன் புன்னகையில்
எங்கள் சோகம் மறந்தோம்..
கண்ணீரை மறக்கிறோம்...
என் செல்லமே!!
என்னையும்
அன்னையாய் ஆகினாய்
என் வாழ்கையின்
பொருளை மாற்றினாய்..
love you chellam..
love you chellam..
Saturday, February 27, 2010
ஏங்குது என் உள்ளம்...
நாள் முழுதும் பேசினாலும்
தீருவது இல்லை ஆசை.....
தினமும் வெட்கப்பட்டு
இனி வெட்கம்
மறந்து விடுமோ?
உன்னை காணும் ஒரு நொடியில்
ஆயிரம் கனவுகள் என் கண்ணில்
கண்ணை திறந்தே கனவு காண
என்னால் மட்டுமே முடிகிறதோ....
செல்லமாய் கை உரசி போகும்
ஸ்பரிசம்...
இதமான பார்வை....
நெஞ்சில் என்றும் நீங்காத
உன் வார்த்தைகள்....
போதும் என் வாழ்நாள் முழுதும்.....
என் உயிரில் உறைந்த
உனக்காய் வாழ்வது
உயிரோடு சாவது போல் என்றாலும்
சுகமாய் போனது இன்று...
உடல் வருத்தம் வருகையில்
உன் கனிவு பார்வை...
செல்லமாய் நெற்றியில்
ஒரு முத்தம்.
மீண்டும் வேண்டும் உடல் வருத்தம்
ஏங்குது என் உள்ளம்...
நெருங்கி நீ வருகையில்
விலகி நான் செல்வதால்
நொறுங்கி போவதாக
நீ சொல்லும் சொல் கூட
ரசிக்கிறேன் நான்......
என்னை தேடும் உன்னை
தேட வைப்பதில் சுகம் என்பேன்...
என்னை காக்க வைப்பதில்
சுகம் என்பாய் நீ....
ஒருவரை ஒருவர் ரசிக்கிறோம்
ரகசியமாய்....
வாழ்நாள் முழுதும் வேண்டும்
தேடல், காத்தல், ரசித்தல்....
பேராசையாய் என் உள்ளம்....
கண்ணீரோடு வாழும்
காலம் வந்தாலும்
உன் நினைவுகள் போதும்
என் கண்ணீரை துடைக்க....
Saturday, February 20, 2010
காத்திருப்பத்தின் அர்த்தத்தை..
சந்தோஷம்
எல்லோருக்கும் வரும்
வசந்தம்...
காத்திருந்தேன்.....
வாசல் வரை வந்தும்
உள்ளே வரவில்லை..
எனக்குள்ளேயும் வரவில்லை....
கைக்கிட்டாதவை கணக்கில் இல்லை
கை சேர்ந்தது எதுவும் நிலை இல்லை....
தோல்விகள் புதிதும் இல்லை...
தோற்பததால் பயமும் இல்லை..
நம்பிக்கை மட்டுமே மனத்தில் கொண்டு
நடமாடும் ஜீவன் நான்...
காலம் பதில் சொல்லும்..
காத்திருப்பத்தின் அர்த்தத்தை.....
எல்லோருக்கும் வரும்
வசந்தம்...
காத்திருந்தேன்.....
வாசல் வரை வந்தும்
உள்ளே வரவில்லை..
எனக்குள்ளேயும் வரவில்லை....
கைக்கிட்டாதவை கணக்கில் இல்லை
கை சேர்ந்தது எதுவும் நிலை இல்லை....
தோல்விகள் புதிதும் இல்லை...
தோற்பததால் பயமும் இல்லை..
நம்பிக்கை மட்டுமே மனத்தில் கொண்டு
நடமாடும் ஜீவன் நான்...
காலம் பதில் சொல்லும்..
காத்திருப்பத்தின் அர்த்தத்தை.....
சொர்க்கமாய்..
அழகான நிலவொளியில்
இதமான காற்று
நெஞ்சை வறுட
மெல்லிய ஒலியில்
அமுதமான பாடல் ஓலிக்க
என் அருகே நீ
என்னால் ரசிக்க முடியவில்லை
எதையும்..
என் பார்வை முழுவதும்
உன்னில் நிலை கொண்டு இருக்க
நிலவொளி கூட அந்நியமானது...
உன் அணைப்பில்
காற்றின் குளுமை
என்னை அனலாய் சுட்டது
என்ன மாயம் செய்தாய்
இயற்கைக்கு மாறாய்
எல்லாமே எனக்கு மட்டும்..
உன்னால் என்னை
சுற்றி நிகழும் நிகழ்வுகளை
மறக்கிறேன்
உன்னையே நினைக்கிறேன்
என்ன சாப்பிடாய் என்று
நீ கேட்கும் போது தான்
உணர்கிறேன் உன்னால்
நான் சாப்பிட மறந்ததை...
உம்ம்ம்மா என்று நீ
வார்த்தையால் கொடுக்கும்
முத்தத்தை பெறவே மீண்டும்
ஒரு ஆயுள் வேண்டுகிறேன்
சத்தம் இல்லாமல்
என்னை கொல்லும்
முத்தமோ??
உன்னால் சிரிக்கிறேன்
உன்னால் அழுகிறேன்
உன்னால் ஆறுதல் அடைகிறேன்
உன்னால் எல்லாம் உன்னால்
என் மனம் அலைந்து திரிவதும்
உன்னால்....
நரகமாய் சில நேரங்களில்
நினைத்தாலும்..
நரகத்திலும் என்னவன் நீ
என்னோடு இருந்தால்
நரகத்தை கூட ரசிப்பேன்
சொர்க்கமாய்..
வந்து விடு!!!
முள்ளில் தைத்து
ரணமான என் இதயத்தை
முள்ளால் எடுக்காதே
உன் முத்ததால் துடைத்து விடு
போதும்....
என் உள்ளத்தை தொட்ட
கைகள் ஆயிரம் கவிதை
எழுதின...
என் உள்ளத்தை தொட்ட
ஒரே கவிதை நீ...
உன் கண்கள் வடிக்கும்
கண்ணீர் கூட ஒரு அழகான
கவிதை என்றாய்....
தினமும் இன்று
உன்னை பிரிந்து
கண்ணீர் வடிக்க வைத்து
விட்டாய்...
என் கன்னம் வருடி
உன் கை துடைக்கும்
தருணத்திற்காக
கண்ணீர் கூட
சுகம் தான் எனக்கு...
உன் கண்ணில்
என் கண்ணை காணும்
நொடிகளில்
என் கண்ணை நானே
காண முடியாமல் தவிக்கிறேன்...
உன் இமை மூடும் நொடியில்
உன்னை மட்டுமே
காண முடிகிறது என்னால்...
உன் பார்வையின் வலிமை
என் இதயம் வரை
துளைக்கிறது...
என்றாவது வந்து போகும்
மின்னலாய் உன் புன்னகை...
மின்னலை கொண்டு
படம் எடுக்க தூண்டும்..
எப்போதும் சிரிக்கும்
சிரிப்புக்கு அர்த்தம் இல்லை...
அழகும் இல்லை...
என் இதயம் இடம் மாறினாலும்
உன் இதயத்தோடு இருப்பதால்
நிம்மதி உறக்கம் எனக்கு...
உன்னை விட யாரால் முடியும்
என் இதயத்தை பத்திரமாக
பார்த்துக் கொள்ள...
Subscribe to:
Posts (Atom)