Friday, July 22, 2011

மரணத்திலும் மரிக்காத


ஓயாமல் ஒலித்து நகரும்
நேரத்துளிகள் காலத்தை
கடந்து போகச்செய்ய
வேகமாய் துடித்துக்
கொண்டிருக்கும்
"இதயம்" ஒரு கணம்
நின்று விடுமோ என அச்சத்தில்
என் உள்ளம் துடிக்க
மரணத்தின் பயமோ
கருதவில்லை நான்....

மரணத்திலும் மரிக்காத
நினைவுகளாய்
காலம் கடந்தும்..
என் காலம் கடந்தும்
நீங்காது வாழும்
உன் நினைவுகள்
மட்டும் என்னோடு

உனக்குள் தொலைந்த
இதயத்தை தேட
உன் நினைவுகள்
சொந்தமாகி போனது

Thursday, May 19, 2011

கண்ணீர் சிந்த




என்னிடம் உனக்கு
காதல் இல்லை என்று
அறிந்த போது தான்
உன்னிடம் என் காதல்
அதிகமாகி போனதோ

சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை
நீ இருந்த போது
கண்ணீரின் அர்த்தம்
புரிந்தது
உன்னை பிரிந்த போது..

உன்னை நினைக்காமல்
இருக்க இயலாத
இதயத்தைப் போல
உன்னை பார்த்து செல்லும்
நொடிகளில் கண்ணீர் சிந்த
தவறுவதில்லை
விழிகள்....

உன்னை மறப்பதை


நீ எனக்கு தந்த
அழகிய நினைவுகள்..
பேசி போன வார்த்தைகள்,
எழுதிய கவிதைகள்,
எல்லாமே எனக்காக..
எனக்காக மட்டுமே..
வானவில்லாய் வந்து
மறை(ற)ந்து போனாய்
இருளில் என் இதயம்....
ஏங்கும் மனது
தேடுவது உன்னையே..
எப்படி மறக்க
முடிந்தது உன்னால்??
எல்லாம் சொல்லி தந்த நீ
உன்னை மறப்பதை
சொல்லி தர மறந்தது ஏனோ...

எனக்காக அல்ல



தொலைந்து போன
நிஜங்களை எல்லாம்
நினைவுகளாய்
என்னுள்

காற்றாய் நீ
காண முடிவதில்லை
என்னை தொட்டு செல்கையில்
உன்னை சுவாசித்து
உயிர் வாழ்கிறேன்

சுவாசித்து
உயிர் வாழ்வது
எனக்காக அல்ல
என் இதயத்தில்
இருக்கும் உனக்காக..

Saturday, April 30, 2011

கேள்விக்குறியாய் நான்....


தினமும் உன்னை
ஒரு முறையாவது
பார்த்து விட்டு செல்கிறேன்
தூரத்தில் இருந்து
பார்ப்பது கூட
சுகம் தான் எனக்கு...

புரிந்து இணைந்தோம்
புரியாமல் பிரிந்தோம்
தோல்வியில் துவண்ட
எனக்கு
தோள்சாய தோள் தந்தாய்
சாயும் வேளையில்
சொல்லாமல் ஏன் சென்றாய்....

தோல்வியை பர்க்கவிடின்
கதறி இருப்பேன்
தோல்வியே எனக்கு
சாபம் ஆனதால்
சலனம் இல்லாமல்
எல்லாமே என் மனதோடு
பூட்டினேன்
உன்னை என் மனதோடு
பூட்டினேன்....

சில நாட்களாய்
இருப்பினும்
சொர்க்க நாட்கள்..
உன்னை எனக்கு
சொந்தமாக்கிய நாட்கள்..

என் பெயரை நீ
உச்சரிக்கும் தருணத்தில்
எல்லாம் செத்து பிழைத்தேன்...
இன்று செத்துக்கொண்டிருகிறேன்
உன் குரல் கேட்காமல்...

நேசிக்கும் உரிமை தந்தாய்
நேசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்னமும்..
ஒரு முறை ஏனும்
என் நேசம் உனக்கு புரியாதோ????
உன் குரல் கேட்கும்
காலம் வருமோ??

காத்து கொண்டிருக்கிறேன்
காலம் வருமோ
தெரிய வில்லை
கேள்விக்குறியாய்
நான்....

Friday, March 25, 2011

சுவாசமாய் வருவாயா???





நீ மௌனித்திருக்கும்

ஒவ்வொரு
நொடிகளிலும்

சிந்தனை
சிதைந்து

இதயம் நொறுங்கி
துடித்து
பரிதவிக்கிறேன்

முத்தமொழிகள்
பேசிய
உன் உதடுகள்
இன்று

மௌனத்தை
தாங்கி நிற்க

வாய்
மொழி கேட்காவிடினும்

உன்
கை மொழி
காவியத்திற்காக
கலங்கிக் கொண்டு
காத்திருக்கும்
பேதையாய் நான்...
மௌனத்தை
பரிசளித்து

என்
இதயத்திற்கு

இறுதி
அஞ்சலி

செலுத்தி
விடாதே

உன்னை எதிர் பார்த்தே
என்
இதயம் துடித்து

உன் மூச்சுக்காற்றின்
தீண்டலுக்காக
சுவாசமின்றி
துடிக்கும்
எனக்கு
சுவாசமாய் வருவாயா???

Saturday, February 5, 2011

காதலோட வாழ


கவிதையில் நீ
"கவி" யாய் நான்..
கவிதைகள் அழகாகியது
கவியின் வரிகளிலும் நீ..
காதல் நரகம்,,
காதலை காணாதவரை..
கண்ட பின்பும் நரகம்
காத்திருக்க முடியாததால்..
காதல் வலியை தந்தாய்
காதலும் சுகமாய் போனது...
காத்திருக்க முடிவதில்லை
காதல் வேண்டுமா தெரியவில்லை...
கண்ணீரில்...
காதலோட வாழ உன்
காதலோட வாழ
கலங்கி கொண்டிருக்கிறேன்