Sunday, December 21, 2014

கண்களால் கைது செய்து
இதயச் சிறையில்
அடைத்து விட்டாய்....
இறுதி வரை இருந்து விடுகிறேன்
ஆயுள் கைதியாய் ..

புதுக்கவிதை

கவிதை எழுதி
முடிக்க நினைத்து
முற்றுப் புள்ளி வைக்க
நினைக்கையில்
முத்தப் புள்ளியிட்டு
தொடங்கி வைக்கிறாய்
முடிவுறா
ஒருப் புதுக்கவிதையினை...