Saturday, February 27, 2010

ஏங்குது என் உள்ளம்...


நாள் முழுதும் பேசினாலும்
தீருவது இல்லை ஆசை.....
தினமும் வெட்கப்பட்டு
இனி வெட்கம்
மறந்து விடுமோ?

உன்னை காணும் ஒரு நொடியில்
ஆயிரம் கனவுகள் என் கண்ணில்
கண்ணை திறந்தே கனவு காண
என்னால் மட்டுமே முடிகிறதோ....

செல்லமாய் கை உரசி போகும்
ஸ்பரிசம்...
இதமான பார்வை....
நெஞ்சில் என்றும் நீங்காத
உன் வார்த்தைகள்....
போதும் என் வாழ்நாள் முழுதும்.....

என் உயிரில் உறைந்த
உனக்காய் வாழ்வது
உயிரோடு சாவது போல் என்றாலும்
சுகமாய் போனது இன்று...

உடல் வருத்தம் வருகையில்
உன் கனிவு பார்வை...
செல்லமாய் நெற்றியில்
ஒரு முத்தம்.
மீண்டும் வேண்டும் உடல் வருத்தம்
ஏங்குது என் உள்ளம்...

நெருங்கி நீ வருகையில்
விலகி நான் செல்வதால்
நொறுங்கி போவதாக
நீ சொல்லும் சொல் கூட
ரசிக்கிறேன் நான்......

என்னை தேடும் உன்னை
தேட வைப்பதில் சுகம் என்பேன்...
என்னை காக்க வைப்பதில்
சுகம் என்பாய் நீ....
ஒருவரை ஒருவர் ரசிக்கிறோம்
ரகசியமாய்....

வாழ்நாள் முழுதும் வேண்டும்
தேடல், காத்தல், ரசித்தல்....
பேராசையாய் என் உள்ளம்....

கண்ணீரோடு வாழும்
காலம் வந்தாலும்
உன் நினைவுகள் போதும்
என் கண்ணீரை துடைக்க....

Saturday, February 20, 2010

காத்திருப்பத்தின் அர்த்தத்தை..


சந்தோஷம்
எல்லோருக்கும் வரும்
வசந்தம்...
காத்திருந்தேன்.....
வாசல் வரை வந்தும்
உள்ளே வரவில்லை..
எனக்குள்ளேயும் வரவில்லை....
கைக்கிட்டாவை கணக்கில் இல்லை
கை சேர்ந்தது எதுவும் நிலை இல்லை....
தோல்விகள் புதிதும் இல்லை...
தோற்பததால் பயமும் இல்லை..
நம்பிக்கை மட்டுமே மனத்தில் கொண்டு
நடமாடும் ஜீவன் நான்...
காலம் பதில் சொல்லும்..
காத்திருப்பத்தின் அர்த்தத்தை.....

சொர்க்கமாய்..


அழகான நிலவொளியில்
இதமான காற்று
நெஞ்சை வறுட
மெல்லிய ஒலியில்
அமுதமான பாடல் ஓலிக்க
என் அருகே நீ

என்னால் ரசிக்க முடியவில்லை

எதையும்..
என் பார்வை முழுவதும்
உன்னில் நிலை கொண்டு இருக்க
நிலவொளி கூட அந்நியமானது...

உன் அணைப்பில்

காற்றின் குளுமை
என்னை அனலாய் சுட்டது

என்ன மாயம் செய்தாய்

இயற்கைக்கு மாறாய்
எல்லாமே எனக்கு மட்டும்..
உன்னால் என்னை
சுற்றி நிகழும் நிகழ்வுகளை
மறக்கிறேன்
உன்னையே நினைக்கிறேன்

என்ன சாப்பிடாய் என்று

நீ கேட்கும் போது தான்
உணர்கிறேன் உன்னால்
நான் சாப்பிட மறந்ததை...

உம்ம்ம்மா என்று நீ

வார்த்தையால் கொடுக்கும்
முத்தத்தை பெறவே மீண்டும்
ஒரு ஆயுள் வேண்டுகிறேன்
சத்தம் இல்லாமல்
என்னை கொல்லும்
முத்தமோ??

உன்னால் சிரிக்கிறேன்

உன்னால் அழுகிறேன்
உன்னால் ஆறுதல் அடைகிறேன்
உன்னால் எல்லாம் உன்னால்
என் மனம் அலைந்து திரிவதும்
உன்னால்....

நரகமாய் சில நேரங்களில்

நினைத்தாலும்..
நரகத்திலும் என்னவன் நீ
என்னோடு இருந்தால்
நரகத்தை கூட ரசிப்பேன்
சொர்க்கமாய்..

வந்து விடு!!!

முள்ளில் தைத்து
ரணமான என் இதயத்தை
முள்ளால் எடுக்காதே
உன் முத்ததால் துடைத்து விடு
போதும்....

என் உள்ளத்தை தொட்ட


கைகள் ஆயிரம் கவிதை
எழுதின...
என் உள்ளத்தை தொட்ட
ஒரே கவிதை நீ...

உன் கண்கள் வடிக்கும்
கண்ணீர் கூட ஒரு அழகான
கவிதை என்றாய்....

தினமும் இன்று
உன்னை பிரிந்து
கண்ணீர் வடிக்க வைத்து
விட்டாய்...

என் கன்னம் வருடி
உன் கை துடைக்கும்
தருணத்திற்கா
கண்ணீர் கூட
சுகம் தான் எனக்கு...

உன் கண்ணில்
என் கண்ணை காணும்
நொடிகளில்
என் கண்ணை நானே
காண முடியாமல் தவிக்கிறேன்...

உன் இமை மூடும் நொடியில்
உன்னை மட்டுமே

காண முடிகிறது என்னால்...
உன் பார்வையின் வலிமை
என் இதயம் வரை
துளைக்கிறது...

என்றாவது வந்து போகும்
மின்னலாய் உன் புன்னகை...
மின்னலை கொண்டு
படம் எடுக்க தூண்டும்..

எப்போதும் சிரிக்கும்
சிரிப்புக்கு அர்த்தம் இல்லை...
அழகும் இல்லை...

என் இதயம் இடம் மாறினாலும்
உன் இதயத்தோடு இருப்பதால்
நிம்மதி உறக்கம் எனக்கு...
உன்னை விட யாரால் முடியும்
என் இதயத்தை பத்திரமாக
பார்த்துக் கொள்ள...

இதயத்தின் வேலையை


உன்னை நினைத்து துடிக்கும்
இதயத்திற்கு பல முறை
சொல்லிவிட்டேன்...
உன்னை நினைக்க வேண்டாம் என்று....

உன்னை மறக்க நினைத்தாலே
என் இதயம் துடிக்க மறக்கிறது...

இப்போதும் துடிக்கிறது இதயம்
உன்னை இழந்துவிடோமோ
என்ற பயத்தில்...

இதயத்தின் வேலையை
இருமடங்காக்கி விட்டாய்...
உன்னை நினைத்து,
உயிரும் வாழ வேண்டுமே???

எனக்குள் ஒரு மாற்றம்


எனக்குள் ஒரு மாற்றம்
உன்னை பார்த்த கணத்தில்
என் நெஞ்சம் துடித்தது
எனக்காய் பிறந்தவன் நீயோ..

உன் பார்வையால்
கட்டி இழுத்தாய்...
இன்று வரை விடு பட
இயலவில்லை என்னால்...

நித்தம் உனை நினைத்தேன்..
நெருங்கி வரத் துடித்தேன்...
உன்னை நினைத்து
இதயம் துடித்து வாழ்பவள் நான்


சொல்லிவிட்டு போ..
உன்னை எண்ணி வாழும்
எனக்கு இல்லை..
உன்னை நினைத்து துடிக்கும்
இதயத்திற்கு....

உனக்காக துடித்து
எப்போது துடிக்க மறக்கும்
என்று தெரியாத நிலை....

கண்ணீரில் நான்..


நேசத்தை நெஞ்சில் சுமந்து
ஏக்கத்தை கண்களில் தேக்கி
என் சொந்தமாய்
உன்னை நினைத்து
கவலைகள் மற(றை)க்கிறேன்

ஓலை குடிசையில்
வாழ்ந்தாலும்
உன் மார்பில் முகம் புதைத்து
உன் அரவணைப்பில்
கண் மூடி
தூங்கினால்
உலகமே என் அருகில்..
கர்வத்தோடு தூங்கும்
நிம்மதியான தூக்கம் வேண்டும்

பற்றி எரிந்து அணையும்
நெருப்பாய் மடிந்தாலும்
உனக்கான வெளிச்சம்
தருமேயாயின்
நெருப்பாய் மடிவேன்..

விழிகளில் வழிவது
கண்ணீர் இல்லை..
உன் மீது
எனக்கு இருக்கும்
காதல்..

தென்றலை பார்த்தவர்
உண்டோ??
என் காதல் தென்றலோடு
கலந்திருப்பதினால்
தானோ
நீ உணர மறுக்கிறாய்???

கைகளுக்கு சிக்குவதில்லை
தண்ணீர்...
தண்ணீராய் நீ..
கண்ணீரில் நான்
..