Friday, June 11, 2010

என் இதயம்



ஒவ்வொரு நாளும்
உன்னை நினைத்தே
என் நிமிடங்கள்
கரைகின்றது.....

உன்னோடு பேச
எண்ணி ஓயாமல்
உன் எண்களை அழுத்தி
கைபேசியில் அச்சுக்கள்
அழிந்தே விட்டன....
அழிந்து போனது
அச்சுக்கள்
மட்டுமே...

என் மனதில்
அழியாமல்
உன்னை சுமந்தே
தனிமையாய்
செல்கிறது
என் நாட்கள்....

நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்கள்
மணித்துளிகளாகி
நாட்கள் ஓடி
வருடம் கூடி
இன்னும் குறையவில்லை
உன் மீது எனக்கு
உண்டான காதல்....

என் இதயத்துடிப்பின்
ஓசையில்
உன் பெயர் ஒலிக்கும்....
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயரை
முத்தமிட்டே
என் இதயம் உயிர் பெறும்

உன்னை மட்டுமே
நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்....
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் இறுதி வரையிலும்....

என் உயிரே!!!
சீக்கிரம் வந்துவிடு....
உன் மார்பில் முகம்
புதைத்து அழுது
என் துன்பம்
மறக்கவேண்டும்
ஆதரவாய் நீ
தலை கோதும்போது
என் ஆயுள் போகவேண்டும்...
உன் மடியினிலே
என் ஆயுள் போகவேண்டும்...

பாசத்தை தேடும்



பாசத்தை தேடும்
மனது...
பழகிய போது
பாசம் தந்து
காயப்பட்ட மனதிற்கு
கனிவாய் பேசி
கவலை
மறக்க செய்தாய்

பரிதவிக்கும்
மனதுக்கு பக்குவமாய்
ஆறுதல் அளித்தாய்...
இன்றும்
ஆறுதலை
தேடி அலைகிறேன்...

பாசம் தர மறுத்தாலும்
தாங்கிக் கொள்வேன் ...
என்னை விட்டு
விலகி நின்று
உன்னால்
நான்
புறக்கணிக்க
படுவதை
தாங்கி கொள்ளும்
இதயம் என்னிடம் இல்லை...

எதையும்
தாங்கும் இதயம்
எல்லோருக்கும் உண்டாம் ...
இதையும்
தாங்கும்
இதயத்தை
எனக்கு
மட்டும்
தந்துவிடு இறைவா....