Friday, July 23, 2010

எனக்கே எனக்கு....



கடந்த காலம்
கசப்பாய் கடந்து விட
நிகழ் காலம்...
நெருப்பாய் சுட்டுவிட
எதிர்காலம்...
கவலையில் கலங்கிவிட..
அனாதையாய் பல நாட்கள்
தனிமையில் சிதைந்து விட...

சொந்தமாய்
என் சொந்தமாய்
எதுமே இல்லாத போதும்...
தோல்வியில்
துவண்டு துடித்த
என்னை
தோள் கொடுத்து
தூக்கி நிறுத்தி...

ஆதரவாய் ஆறுதல்
வார்த்தை பேசி
என் கிறுக்கல்களையும்
ரசித்து....
என் உயிர் மூச்சில் கலந்து
இன்றும் என்னை நேசித்து
என் துயர் மாறாக செய்யும்
என் உறவே..
என் நட்பு
தோட்டத்துக்குள்
வந்து போகும் பறவையே..
உன் நட்பில் துயர் மறக்கிறேன்...
உன் சிரிப்பில்
என் கண்ணீரை மறைக்கிறேன்
துயர் துடைக்கும்
உன் கரங்களுக்கு
என் ஆயிரம் முத்தங்கள்..

என் நட்பே!!!
எனக்கும் மட்டும்
உன் அன்பை தந்துவிடு...
பாசத்தை பகிர்ந்து தருவது
அன்னையாக மட்டுமே
இருந்து போகட்டும்
உன் பாசம் எனக்கே எனக்கு
மட்டுமே வேண்டும்....



No comments:

Post a Comment