Saturday, February 20, 2010
என் உள்ளத்தை தொட்ட
கைகள் ஆயிரம் கவிதை
எழுதின...
என் உள்ளத்தை தொட்ட
ஒரே கவிதை நீ...
உன் கண்கள் வடிக்கும்
கண்ணீர் கூட ஒரு அழகான
கவிதை என்றாய்....
தினமும் இன்று
உன்னை பிரிந்து
கண்ணீர் வடிக்க வைத்து
விட்டாய்...
என் கன்னம் வருடி
உன் கை துடைக்கும்
தருணத்திற்காக
கண்ணீர் கூட
சுகம் தான் எனக்கு...
உன் கண்ணில்
என் கண்ணை காணும்
நொடிகளில்
என் கண்ணை நானே
காண முடியாமல் தவிக்கிறேன்...
உன் இமை மூடும் நொடியில்
உன்னை மட்டுமே
காண முடிகிறது என்னால்...
உன் பார்வையின் வலிமை
என் இதயம் வரை
துளைக்கிறது...
என்றாவது வந்து போகும்
மின்னலாய் உன் புன்னகை...
மின்னலை கொண்டு
படம் எடுக்க தூண்டும்..
எப்போதும் சிரிக்கும்
சிரிப்புக்கு அர்த்தம் இல்லை...
அழகும் இல்லை...
என் இதயம் இடம் மாறினாலும்
உன் இதயத்தோடு இருப்பதால்
நிம்மதி உறக்கம் எனக்கு...
உன்னை விட யாரால் முடியும்
என் இதயத்தை பத்திரமாக
பார்த்துக் கொள்ள...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment