Thursday, April 5, 2012

இதயம் இன்று















உன்னை நினைத்த
இதயம் இன்று
தனியே துடிக்க
காதலை சொல்ல
முனைந்த முயற்சிகளெல்லாம்
தோல்வியில் முடிய
சுவாசம் மறக்காமல்
உன்னை சுமந்த இதயத்தில்
இன்று ஏனோ சிறு பிளவு
உடைந்த போன இதயம்
தேடி துடிப்பது
உன்னை மட்டுமே

என்னை சுற்றி
வந்த உன்னை
பாராமுகமாய் இருந்ததால்
இன்று என்னை பார்க்காமல்
தவிக்க விட்டு
பாராமுகமாய்
இருப்பது முறையோ...

கோடி வார்த்தைகள்
நொடிக்கொருதரம்
பேசுபவள் இன்று
ஊமையாய்
உன் ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்

முள்ளாய் உதிர்த்த
உன் வார்த்தையால்
கிழிந்த என் இதயம்
உதிரம் சிந்த
உதிர்த்து விடு
ஒரு வார்த்தையை ...

காதல் எனும் ஊசியில்
நேசத்தை நூல்லாக்கி
உன் தீண்டலை மருந்தாக்கி
கிழிந்த இதயத்தை தைத்து விடு..

கிழிந்த இதயம்
மீண்டும் துடிக்க நினைப்பது
உன் ஒருவனுக்காகவே....

ஏற்றுக்கொள்
என் இதயத்தை
காதலை காதலாய்
தருகிறேன்...
என்னை விட உன்னை
உண்மையாய்
காதலிக்க யாரால் முடியும்?? ♥ ♥♥ ♥

உயிரைத் தொலைத்தேன் உன்னில் தானோ



Wednesday, April 4, 2012

என் காதலா ..















என் காதலை சொல்ல
ஒரு தினம் போதுமா
என் காதலா ..
உன்னைக் கொண்டாட
ஒரு தினம் போதுமா
காதலோடு காத்திருக்க
ஒரு தினம் போதுமா
தினம் தினம் வேண்டும்
உன்னோடு உண்டான
என் காதலை கொண்டாட
காதலர் தினம்....

காற்றாய் மாறி
காதலிக்க ஆசை
உன் மூச்சுக்காற்றாய்
உன் இதயத்தை
முத்தமிட ஆசை..

உன்னை நினையாமல்
ஒரு நாளும் முடிவதில்லை
உன்னை மறந்தாலே
என் உயிர்
எனக்கு சொந்தம் இல்லை...
என் அன்பில்
நிறமாற்றம் இல்லை.


கனவுகளில் நீ
விழித்திருக்கையில் நீ
நினைவுகளாய் நீ
உன் காதலில்
விழுந்ததால்
எனக்குள் எல்லாமே நீ

இமைக்கும் நொடியில்
உன்னை பார்க்க
தவறினும்

என் இதயபார்வையில்
ஒரு நொடியும் இமைக்காமல்
பார்த்து வருகிறேன்

பூக்கும் மலருக்கு
மரணம் ஒருநாள் தான்
நீ பேசாததால் தினமும்
மரித்து போகிறேன்

எனக்காக நீ
வரமாட்டாயென அறிந்து
நேரம் போவதை அறியாமல்
காத்திருக்கிறேன்...

என தலையணை அருகே
தொலைபேசியோடு
தவமிருப்பேன்
நீ அழைக்க மாட்டாய் என
அறிந்தும்..

உன்னையே நினைத்து
துடித்திருகிறேன்
நீ என்னை நினைக்கமட்டாய்
என அறிந்தும்..

எனக்காக நீயில்லை
என அறிந்தும்...
உனக்கவே காத்திருக்கிறேன்....

இவை வெறும் வரிகள் அல்ல
உன்னால் நான் படும் வலிகள்
காதல் வலிகள்... ♥

**Happy Valentines Day**

வரத்தை தந்துவிடு














எங்கோ அழகிய
பாடல் ஒலிக்க
பாடலின் வரிகளில்
உன்னோடு நான்..

நீ பாட நான்
கேட்ட பாடல்கள்
எல்லாம் நினைவில்
வந்து போக
மனம் கற்பனையில் மிதக்க
கொல்லாமல் கொல்கின்றாயே!

முத்தமிட்டு கொல்லும் வித்தை
கற்றவனோ?
முத்த சத்தத்தில் மூர்ச்சையாகி
உன்னை தேடியே
என் கற்பனை சிறகுகள் பறக்க
வா ஒருமுறை
காதல் வானில்
கவிதையாய் வாழ்ந்துவிடலாம்

யாருமில்லா உலகில்
உன்னருகில் நான் மட்டும்
எனக்காக நீ மட்டும்..
நினைக்கையில் இனிக்கும்
இனிமையான கற்பனை
நிஜத்தில் நிஜமாகும் நாள்
வர கூடுமோ??

முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும்
என்னோடு நீ வேண்டும்
பேராசையோ???
வேண்டாம் பேராசை....
ஒரே நாளில்
முன்னூற்று அறுபத்தைந்து நாள்
வாழ்கையை வாழ்ந்து விடுவோமே...

சூரியனுக்கு விடுமுறை
தந்துவிடு
நிலவின் துணையோடு
காதல் கவிதை எழுதிவிடு
நீ படிக்கும் கவிதையாய்
உனக்கே உனக்காக
நான் இருக்கும் வரத்தை
தந்துவிடு ♥ ♥

சிதறிய சில்லில்















கண்ணாடி என் இதயம்
உன்னை மட்டுமே
காட்டுவேன் என்றேன்..

கண்ணாடி என்பதாலா
அதை நீ
உடைத்து எறிகிறாய்...

எத்தனை முறை
உடைத்தாலும்
உன்னை மட்டுமே
என் இதயம்
பிரதிபலித்து கொண்டே இருக்க
பாழும் இதயத்திற்கு அறியவில்லை
நீ உடைப்பதை அறியாமல்
சிதறிய சில்லில் கூட
உன்னைக் கண்டு
சிரித்து கொண்டிருகிறது

பூட்டிய இதயத்தில்
சுவாசமாய் நுழைந்தாய்
இன்று உன் இதயத்தை பூட்டி
எனக்கு மட்டும்
கதவடைப்பு செய்கிறாயே...

மறக்க நினைத்தேன்..
மறந்துவிட்டேன்
உன்னை மறைப்பதை..

நினைத்து துடிக்கும்
என் வேதனைக்கு
முற்றுபுள்ளி எப்போது..

உன் முத்தத்தில்
முடித்து வைப்பாயா
இல்லை
என் இதய சத்தத்தை
முடித்த பிறகா??

எனக்கான கவிதையாய்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எனக்கான கவிதையாய்
உன்னை மட்டுமே
எழுதி வருகிறேன்...

உன்னுள் நான்
இருப்பதாய் கருதி
என்னுள் உன்னை
பொக்கிஷமாய்
பார்த்துவருகிறேன்..
தூரத்தில் உன் குரல்
உன் இதயமட்டும் எனதருகில்...

உன்னை பார்த்திருக்கிறேன்
நீ பாராமல் இருக்கும் தருணத்திலும்...

ஒவ்வொரு நொடியிலும்
ஓவ்வொரு மணியிலும்
ஒவ்வொரு நாளும்
கடந்து போகையில்
நாட்களின் முடிவு
என்னை கலங்க செய்கிறது....

நாட்களை நிறுத்தி விடு
மணித்துளிகள் மாறாமல்
மடிந்து போகட்டும்...
என்னோடு நீ பேசும் தருணங்கள்
நீண்டு போகட்டும்

என்னை பலரும் கடந்து போக
நீ மட்டும் நிலைத்து விட்டாய்
என் இதயத்தின் துடிப்பாய்...

இப்போதெல்லாம்
ஏனோ என்மனம் பதற...
துடிப்பு மட்டும் இரட்டிப்பாகிறது

பொறுமை இருந்த நெஞ்சில்
இன்று பொறாமை குடிகொள்ள
எனக்காக மட்டுமே நீ
ஏங்குகிறது நெஞ்சம்

அறிந்தும் அறியாமல்
புரிந்து புரியாமல்
நீ நடத்தும் நாடகத்தில்
ஓவ்வொரு நாளும்
போராட்டம் என் மனதுள்....

உரிமையில்லா உன்னிடம்
நேசம் கொண்டேனோ
உணர்வை புரியா உன்னில்
உயிரை தந்தேனோ...
எப்போது உணருவாய்??

தேடி தேடி வரும் என்னை
அலையவைகிறாய்...
கொட்டிதரும் பாசத்தை
குப்பையில் வீசுகிறாய்...

இலையின்
பனித்துளியல்ல
என் நேசம்..
நீ உணரும் தருணம்
ஒருவேளை
என் துடிப்பை நான்
மறந்திருக்கலாம்...

காதலோடு கண்ணீரையும்...














காதலை சொன்னாய்
காதலை தந்தாய்
நட்புக்குள் காதலா
கவலை கொண்டேன்
நட்போடு காதலும் என்றாய்...

காணும் கனவினில்
எல்லாம் உன் முகம் என்றேன்
கனவினிலும்
காதல் செய்வேன் என்றாய்
பேசும் வார்த்தைகள்
இனிமை என்றாய்....
பேசவைத்து பார்த்து ரசித்து
சிரித்து மகிழ்ந்தாய்...

கொஞ்சும் என் மொழி
மழலை என்றாய்
சிரிக்கும் என் ஒலி
கவிதை என்றாய்..
செய்யும் குறும்புகள்
பிடிக்கும் என்றாய்..

சின்ன கவிதைகள்
செல்ல சிணுங்கல்கள்
முத்த சத்தங்கள்
இதயத்தின் துடிப்புகள்
எல்லாம் கேட்கும் தருணம்
வேண்டும் என்பாய்

தேடும் கண்களை
தவிக்க வைப்பாய்
தீயாய் தீண்டலை
ரசிக்க வைப்பாய்
கொஞ்சி பேசி
சிலிர்க்க வைப்பாய்
துவளும் மனதை
துடிக்க வைப்பாய்....

காத்திருப்பது பிடிக்கதென்பேன்
காதலோடு காத்திரு
காத்திருப்பதை
மறப்பாய் என்றாய்

காத்திருக்கிறேன்
காதலோடு
மறந்தது நீயோ???

என் உறக்கம் மறந்தேன்
என் குறும்புகளை மறந்தேன்
என் சிரிப்பை மறந்தேன்
என் சினுங்களை மறந்தேன்
என் கவிதையை மறந்தேன்
என்னிடம் நீ ரசித்தவை
எல்லாம் மறந்தேன்
உன்னை மட்டுமே
மறக்க முடியாமல்...

காத்திருந்த கண்கள்
இன்று கண்ணீரில்..

என் கண்ணீரும்
பிடிக்குமோ?
சொல்லாமல்
சென்றுவிட்டாயே
சொல்லி இருந்தால்
கண்ணீரை பரிசளித்திருபேன்
காதலோடு கண்ணீரையும்....

நிஜமான காதலை தந்துவிடு..















அந்தி பொழுதினில்
அழகிய நிலவொளியில்
அருகருகே நாம்
ஆனந்தமானது மனம்...

அர்த்தம் இல்லா பேச்சுக்களும்
ஆரவாரம் இல்லாத அமைதியும்
ஆயிரம் எண்ணங்களும்
ஆசை கனவுகளும்
அமுதமாய் கொஞ்சும் மொழிகளும்
அரவணைக்கும் தருணங்களும்
அனைத்தும் எனக்கே எனக்காக வேண்டி
ஆசைகளை சுமந்து உன்னோடு நான்..

உன் தோள் சாய்ந்து
உலகை மறக்க
உன்னை எண்ணியே
உன்னோடு என் கனவுகள் தொடர
உன் கண் பார்த்து கவலை மறந்து
உன்னில் என்னை தொலைத்து
உன் நேசத்தில்
உன்னோடு வாழந்த நினைவுகள்
எல்லாம் என் கண்முன்னே...

காலத்தின் சூழ்ச்சியா
என் பிறவியின் சாபமா??
உன்னை பிரிந்து
என் நாட்கள்
எல்லாம் நரகமாய்...

ஓவ்வொரு முறையும்
நிலவினில் தோன்றி
மறையும் முகமாய்
உன் முகம்..

நிலவே தேய்ந்து விடாதே
என்னவனை
உன்னில் கண்டுவரும்
என்னை தேம்ப விடாதே....

நிலவில்லா வானம்
அமாவாசையாம்
என்னவன்
இல்லா என் வாழ்வு
சூனியமாய்.....

நிலவினில் மட்டும்
நிழலாய் தெரியும் உன் முகம்
நிஜமாய் தெரியும் நாள் வரும்
நிழலாய் போனவனே
நிஜத்தில் வந்துவிடு...
நிஜமான காதலை தந்துவிடு..

நிலவில் வாசம் உனக்கெதற்கு
நிஜமாய் என்னுள் வசிப்பாய் எனில்
நிலவாய் நான் மாறிவிடவா...

நிலவை பார்த்திருக்கிறேன்
நீ வரும் வருகைக்காக காத்திருக்கிறேன்
நீ வந்தபின் என் பிரிவின்
வேதனையை தீர்த்துவிடு
அன்று மட்டும்
நிலவு தேய்ந்து போகட்டும்...