Monday, January 2, 2012

மறந்து போவாயோ





















வாசித்து பார்க்கிறேன்
உனக்காக நான் வரைந்த
கவிதையை

வாசித்து பார்க்கிறேன்
எனக்காக நீ வரைந்த
கவிதையை

வாசம் செய்தேன்
உன்னுள் நான் கவிதையாய்
என்னுள் நீ கவிதையாய்

மனதில் சிறு சலனம் இன்று
ஏன் இந்த இடைவெளி
தூரத்தில் இருந்தாலும்
நினைக்க வைத்தாய்
சில நொடிகள் துடிக்க வைத்தாய்

உன்னை நினைத்தே
என் நினைவுகள் சுழல
என்னை நினைக்காமல்
உன்னால் எப்படி இருக்கமுடிகிறது

உன் குரல் ஒலி
கேட்காத நாட்கள்
கூடிகொண்டே போக
மனதில் பாரம்
அதிகரிக்க
உன்னை நினைக்கும் பொழுதினில்
தானாக ஒலிக்கும்
என்றோ நீ பேசிய வார்த்தைகளின்
ஒலிப்பதிவு என் இதயத்தில்

உன் கொஞ்சல் வார்த்தைகளில்
வாழ்ந்து விட்டேன் உன்னோடு
கொஞ்சம் நீ மௌனித்திருந்தால்
தாளாத துன்பம் என்னோடு....

மறந்து போவாயோ
மறப்பதாய் இருந்தால் சொல்லிவிடு
மறைந்து போகிறேன்
உன்னை மறந்து அல்ல
உன் கண்ணைவிட்டு
மறைந்து போகிறேன்

என் வசம் இல்லை



எனக்காக இதயம்
உனக்குள் துடிக்க
தனியாக துடிக்க
இன்னொரு இதயமோ.??


உனக்குள் இருக்கவே
என் மனம் ஏங்க
வேண்டாம் இதயம் என்னுள்...

உன் இதயத்தின் வேலையை
இருமடங்காக்கி விட்டேன்
எனக்கு சேர்த்து துடிக்கும்
நம் இதயத்திற்கு
என் முத்தத்தை சத்தமாக்கி
விடவா?

எனக்காக நீ அங்கே துடிக்க
உனக்காக இங்கே
உயிர் வாழ்கிறேன்
உன்னை நினைத்து...

உன் இதயத்துடிப்பின்
ஓவ்வொருத் துடிப்பிலும்
என் காதல் உயிர் வாழ
காதலோடு காத்திருக்கிறேன்
உன்னோடு வாழ...

ஒரு நாள் ஏனும் உன்னோடு
உனக்காக உன்னவளாய்
உன் மடியில் உறங்கிடும்
வரத்தை தந்து விடு ..

உன் கரங்கள் எழுதும்
கவிதையாய் என்னை மாற்றிவிடு
உனக்குள் நான் இருப்பதை போல
எனக்குள் நீ வந்துவிடு..

வாழ்நாள் முழுதும்
உன்னோடு தொடர துடிக்கிறேன்
வாழும் காலம் வரை
உன்னையே நினைக்கிறேன்..

என் இதயமே
மௌனமொழி பேசி
என்னை வதைத்து விடாதே..
எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்ள
தற்போது என் இதயம்
என் வசம் இல்லை

இதயத்திற்கு நிரந்தரமாய்...



முள்வேலிக்குள்
என் இதயம்...
நெருங்க முடியாதென்றேன்
ஆணவம் வேண்டாமடி
உன்னை அடக்க-என்
அரை நொடி பார்வை
போதும் என்றாய்..

இன்று வரை உன்னைக்
கண்ணோடு கண்ணாக
பார்க்க முடியாமல் நான்...

உனக்கே அறியாமல்
உன்னை ரசித்தேன்...
என்னை அறியாமல்
உன்னில் விழுந்தேன்..

நீ சொன்னது நிஜமோ??
சுட்டி இழுக்கும்
உன் பார்வை வலையில்
விழுந்துவிடக் கூடாதென
தினமும் ஒரு
முகத்திரை எனக்கு...

நீ பார்க்காமலே
உன் கண்களுக்குள்
கைதியாய் நான்...

நொடிக்கு ஆயிரம் வார்த்தை
பேசுபவள்- இன்று
உன் முன் மட்டும்
ஊமையாய் வார்த்தையின்றி
தவிக்கிறேன்..

தமிழில் அத்தனை வார்த்தையும்
எனக்கு மட்டும் அந்நியமாய்
போனதோ....

ஒவ்வொரு முறையும்
நீ என்னை அழைக்கையில்
என் பெயரைக் கூட ரசிக்க
தொடங்கிவிட்டேன்...
உன் உதடு பட்டு
அழகாய் போனது என் பெயர்...

காதல் வந்தால் கவிதை வருமாம் ??
பைத்தியங்களின் உளறலென
கேலி செய்து கிண்டல் அடித்து
அழவைத்து பார்த்தேன்
என் தோழிகளை...

இன்று உனக்காக கவி
எழுத நினைத்தபோது
வார்த்தை பஞ்சம் எனக்கு...

காந்த பார்வை நீ வீசுகையில்
இரும்பு முள்வேலிக்கூட
என்னாகும்...
என்னை அறியாமல்
என் இதயத்தை இழந்தேன்...

என்னை இடமாற்றம்
செய்து விடு..
உன் கண்களில் இருந்து
இதயத்திற்கு நிரந்தரமாய்...

என் "கவி"தைகள் காத்திருக்கும்



உனக்காக கவி எழுதி
கண் அயர்ந்த பொழுதில்
கனவில் நுழைந்து
தூக்கத்தை கலைக்கும்
கள்வன் நீ ...

உயிராய் உன்னை நினைத்து
என்னுள் உன்னை சிறை வைத்து
நிஜமாய் என்னுடன் நீ இருக்க
நிழலைப் போல உன்னுள்
என்னை புதைத்துக்கொண்டு
சிலிர்த்து போகும் என் கனவுகளில்
மிதந்துகொண்டே
புல்லரித்து போகின்ற ரோமங்களும்
துடித் துடித்து தவிக்கின்ற இதயமும்
அமைதியாய் இருந்திட
அன்பாய் ஒரு வார்த்தை சொல்வாயா??

என் இரவுகள் எல்லாம் உன் கனவில்
என் தூக்கத்தை விரட்ட
என் பகல்கள் எல்லாம் உன் நினைவில்
துக்கத்தை தாங்கி செல்ல
மௌனமாய் நீ...

ஒவ்வொரு கனவிலும்
என் அருகே நீ இருக்க
முத்தம் கேட்டு இம்சிக்கும்
என்னை சலிக்காமல்
கொஞ்சும் உன்னை
அணைத்து துடித்து
நேசத்தை காட்டும் தருணத்தில்
கலைந்து போகும்
கனவை கொல்ல துடிக்கிறேன்
முற்று பெறாத கனவாய்
என் காதல்...

உனக்காக நான் எழுதும்
கவிதைகள் எல்லாம்
என் அருகே புத்தகமாய்..
பிழைத்திருத்த வசித்தபொழுது
கவியின் வரிகளில்
மயங்கி கனவுலகில் மிதக்க
உன் கவியை நீ படிக்கும் தருணத்தில்
நீயும் உணருவாய்
என் வரிகளின் வலிமையை..
வா கனவுலகில் கை கோர்த்து
காதல் கவிதை நிஜமாய் வரைவோம்

ஆயிரம் வார்த்தைகள் கொண்டு
கவி எழுதினாலும்
நீ சொல்லும் "ம்மா" என்ற
வார்த்தைக்கு ஈடாக
என் கவிதை வரி
அமைக்க முடியாமல்
வெக்கத்தில் நான்...

என் கனவுக் காதலனே
இனிக்கும் உன் நினைவுகள்
சிலிக்கும் என் கனவுகள்
கவியை படிக்க வந்துவிடு
கண்விழிக்கும் பொழுது
என் அருகில் நீ இருக்கும்
அந்நொடியில் என்னை மறக்க
காலம் முழுதும்
உன் கையில் கவிதை
புத்தகமாய் நான் இருக்க
தினம் ஒரு கவி படை(டி)த்திடு

உனக்காக மட்டும்
என் "கவி"தைகள் காத்திருக்கும்
என் காதலைச் சொல்ல

உன் அருகாமையால்


உரிமை இல்லா உன்னிடம்
உரிமை கொள்ள நினைத்தேனோ
உள்ளம் உடைந்து போகிறேன்
அதிக பாசம்
அநாதையாக்கும் அறிந்தும்
பாசத்தை வைத்து
பரிதவிக்கும் உள்ளம்,,,

கைபேசி ஒலித்தால்
உன் அழைப்போ என
என் மனம் செல்ல
ஏமாற்றம் வந்து
கவ்விக்கொள்ள
சோர்ந்த முகத்தோடு
கைபேசியை அணைத்தே
பல இரவுகள் செல்லும்...

குறுஞ்செய்தி பலவந்து
குவியும்...
உன் ஒரு செய்திக்காக
என் மனம் அலையும்...

என்னை தவிர்த்து
நீ இருக்க
உன்னை நினைத்து
நான் தவிக்க
என் மனம் நீ
அறிய வாய்ப்பில்லை...

முள்ளாய் குத்தும்
வார்த்தைகளை கூட
மௌனத்தால்
என் கண்ணீரில் நானே
அழித்துக் கொண்டு
மீண்டும் உன்னை நாடியே
என் மனம் வர
என்னை பார்த்தும் பாராமல் நீ,...
அழவைத்து பார்க்கும்
உறவுகளுக்குள்
உன் அருகாமையால்
உள்ளம் மகிழ்ந்தவள்
இன்று உன் அருகாமை வரம்
வேண்டி காத்திருக்கிறேன்...

பாசத்தை எதிர் நோக்கி




உள்ளுக்குள் அழுது
வெளியே சிரிக்கும் மனது
அறியாமல் நீ
புரியாமல் நான்

புறம்தள்ளும் உன்னை
அகம் வைத்ததால்
தாளாத இன்னல் என்னுள்..

வாட்டும் உன்னை
தேடும் மனது
ஏன் இந்த பாரபட்சம்

அணைக்காத கரையை
தொட்டு செல்லும் அலையாய்
உன்னை பார்த்து செல்கிறேன்
நீ பாராத போதும்

கண்ணீர் வந்து
கன்னத்தை முத்தமிட
கண்ணீரில் காலம் செல்ல
கடுகளவும் குறையில்லை
என் நேசம்...

உன்னை தேடும்
மனதை புரியும் நாள்
எப்போது??
புரியாமல் பாசம் வைத்ததால்
புரிய மறுக்கின்றாயோ??
காத்திருக்கிறேன்
உன் பாசத்தை எதிர் நோக்கி
பார்த்திருக்கிறேன்♥ ♥

உன் ஒருவனுக்காகவே...



உன்னை நினைத்த
இதயம் இன்று
தனியே துடிக்க
காதலை சொல்ல
முனைந்த முயற்சிகளெல்லாம்
தோல்வியில் முடிய
சுவாசம் மறக்காமல்
உன்னை சுமந்த இதயத்தில்
இன்று ஏனோ சிறு பிளவு
உடைந்த போன இதயம்
தேடி துடிப்பது
உன்னை மட்டுமே

என்னை சுற்றி
வந்த உன்னை
பாராமுகமாய் இருந்ததால்
இன்று என்னை பார்க்காமல்
தவிக்க விட்டு
பாராமுகமாய்
இருப்பது முறையோ...

கோடி வார்த்தைகள்
நொடிக்கொருதரம்
பேசுபவள் இன்று
ஊமையாய்
உன் ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்

முள்ளாய் உதிர்த்த
உன் வார்த்தையால்
கிழிந்த என் இதயம்
உதிரம் சிந்த
உதிர்த்து விடு
ஒரு வார்த்தையை ...

காதல் எனும் ஊசியில்
நேசத்தை நூல்லாக்கி
உன் தீண்டலை மருந்தாக்கி
கிழிந்த இதயத்தை தைத்து விடு..

கிழிந்த இதயம்
மீண்டும் துடிக்க நினைப்பது
உன் ஒருவனுக்காகவே....

ஏற்றுக்கொள்
என் இதயத்தை
காதலை காதலாய்
தருகிறேன்...
என்னை விட உன்னை
உண்மையாய்
காதலிக்க யாரால் முடியும்?? ♥ ♥♥ ♥

முத்தமொழிகள்



எப்போதாவது
நீ தருகின்ற முத்தங்கள்
ஒவ்வொன்றும்
தித்திக்க
நித்தம் பெற வேண்டி
காத்திருக்கிறேன்
முற்றுபெறா ஏக்கத்தை
தீர்க்க என்னவனே
வந்துவிடு
உன் முத்தமொழிகள்
தேடி என் உதடுகள்
உலர்ந்து போய்
காத்திருகின்றது ♥ ♥♥ ♥