Monday, July 12, 2010
உன்னை மட்டும்..
நெஞ்சுக்குள் ஏக்கத்தையும்
கண்ணுக்குள் காதலையும்
இதயத்தில் நெருக்கத்தையும்
என் சுவாசத்தில்
உன் வாசத்தையும்
உன் வசமாய் வாழும்
வாழ்க்கை போதும்..
உன் அன்பால் வாழும்
வாழ்க்கை போதும்...
நீ தூரமே இருந்தாலும்
என் இதயத்தில்
நெருக்கம் ஆனாய்..
என் இதயத்தை இறுக்கும்
உன் நினைவுகள்
இறுக்கமாகும் நினைவுகள்
இதமாய் போனது இன்று..
கண்ணில் வழியும் நீர்..
துடைக்கும் கைகளாய் நீ..
வேறென்ன வேண்டும்???
தூக்கத்தை கலைக்கும்
உன் கனவுகள்
தூங்க மறுக்கும் விழிகள்!!!
எல்லாவற்றையும்
எளிமையாக எடுத்துகொண்டேன்
உன்னை மட்டும்
என் மனதில்
வலிமையாக வைத்துகொண்டேன்
வலிமையின் வலியிலும்
வழி தவற வில்லை
உன் வழியில்
என் வழி
இணையும் வரை
காத்திருப்பேன்....
உனக்காக மட்டுமே
காத்திருப்பேன்...
கலங்கிய கண்களோடு...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment