Sunday, December 26, 2010

தவிக்கும் இதயத்துள்


தனிமை நெருப்பாய் சுட்டுவிட
தனிமையிலும்

தவறவில்லை உன் நினைவுகள்
தள்ளி நீ
சென்றாலும்
தவிக்குது என் மனம்..
தடைகள் பல கடந்து
தன்னம்பிகையாய் நேசம் கொண்டேன்
தவிக்க விடுவாய் என அறியாமல்
தவித்து இருப்பது சுகமென இருந்தேன்
தலை கோதி நீ ஆறுதல் தரும்
தருணத்திற்காக...
தவித்திருக்கிறேன்
தனித்திருக்கிறேன் தினமும்

தலை கோத நீ இல்லை..
தவிக்க வைப்பதில் சுகமா உனக்கு...
தன்னம்பிக்கையை
தளர வைத்து விடாதே..

தவிப்பது என் மனம்மட்டுமல்ல

தவிக்கும் இதயத்துள்

துடித்து கொண்டு இருப்பது
நீயும் தான்....

Monday, December 13, 2010

பிரிந்த பின் என் பாசம்


என் கண்ணீரை துடைக்கும்
கரங்களாய் வர வேண்டாம்
ஆறுதல் மொழி பேச
என் அருகில் நீ வேண்டாம்
துக்கம் மறந்து தோள் சாயும்
தோள்களாய் வர வேண்டாம்
நெஞ்சை வதைக்கும்
நினைவுகளாய் வர வேண்டாம்
என் கல்லறையில்
உன் கால் தடம் பதித்து விட்டு போ
என் நேசத்தின் ஆயுள் நீளும்
பிரிந்த பின் என் பாசம்
உனக்கும் புரியும்....