Thursday, May 19, 2011

கண்ணீர் சிந்த




என்னிடம் உனக்கு
காதல் இல்லை என்று
அறிந்த போது தான்
உன்னிடம் என் காதல்
அதிகமாகி போனதோ

சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை
நீ இருந்த போது
கண்ணீரின் அர்த்தம்
புரிந்தது
உன்னை பிரிந்த போது..

உன்னை நினைக்காமல்
இருக்க இயலாத
இதயத்தைப் போல
உன்னை பார்த்து செல்லும்
நொடிகளில் கண்ணீர் சிந்த
தவறுவதில்லை
விழிகள்....

உன்னை மறப்பதை


நீ எனக்கு தந்த
அழகிய நினைவுகள்..
பேசி போன வார்த்தைகள்,
எழுதிய கவிதைகள்,
எல்லாமே எனக்காக..
எனக்காக மட்டுமே..
வானவில்லாய் வந்து
மறை(ற)ந்து போனாய்
இருளில் என் இதயம்....
ஏங்கும் மனது
தேடுவது உன்னையே..
எப்படி மறக்க
முடிந்தது உன்னால்??
எல்லாம் சொல்லி தந்த நீ
உன்னை மறப்பதை
சொல்லி தர மறந்தது ஏனோ...

எனக்காக அல்ல



தொலைந்து போன
நிஜங்களை எல்லாம்
நினைவுகளாய்
என்னுள்

காற்றாய் நீ
காண முடிவதில்லை
என்னை தொட்டு செல்கையில்
உன்னை சுவாசித்து
உயிர் வாழ்கிறேன்

சுவாசித்து
உயிர் வாழ்வது
எனக்காக அல்ல
என் இதயத்தில்
இருக்கும் உனக்காக..