எனக்காக பிறந்தவனே
என்னுள் கலந்தவனே
கண்கள் உன்னை
கண்டதால் தானோ
என்னுள் நுழைந்தாய்...
என்னுள் நீ வந்ததால்தனோ
புதிதாய் பிறந்தேனோ
மரிக்காமல் ஜனனம் தந்தவனே
உன்னை மட்டுமே
நேசிக்கும்
என் இதயத்திற்கு
மூச்சு காற்றாய்
வந்து விடு ...
உன்னை நேசித்து
சுவாசிக்கும் வரத்தை
தந்து விடு....
உன்னோடு இருக்கும்
அழகிய தருணம்
அழகாய் தொடரவேண்டும்..
என் சந்தோசம்
முடியும் தருணம்
என் உயிர்
உன் மடிதனில்
பிரிந்திட வேண்டும்...
No comments:
Post a Comment