Wednesday, July 28, 2010

விதைத்து விட்டாய்...



உன் கண்களுக்குள்
கைதியாய் நான்..
என்றைக்கு
விடுதலை செய்வாய்..
எனக்கும்
இடம்மாற்றம் வேண்டும்..
உன் கண்களில் இருந்து
இதயத்திற்கு நிரந்தரமாய்...

விடை சொல்லமுடியாத
கேள்வியாய்
நீ பார்க்கும் பார்வை
இருக்கும் பொழுது
என்னிடம் மட்டும்
என்ன பதிலை
எதிர் பார்க்கிறாய்??
ஒவ்வொரு முறையும்
உன்னருகில் ஊமையாய்
வார்த்தையின்றி தவிக்கிறேன்
என்னை தூக்கி எறிந்ததாய்
கருதவில்லை நான்..

என்னை உன்னுள்
விதைத்து விட்டாய்...
உன்னுள் நான் வளருவேன்
காதல் விருட்சமாய்...

உன்னில் தொலைத்த
என் நிஜத்தை
தேடுகிறேன்...
என் தேடலில்
கிடைப்பது எல்லாம்
தோல்வியே..

No comments:

Post a Comment