இத்தனை இருளைக் கண்டதில்லை
இமை உறக்கம் கொள்ளவில்லை...
சத்தமின்றி கதறுகிறது
நித்தம் உனைத் தேடுகிறது
விண்ணைத் தொடும் காதலில்
சுற்றித் திறிந்த நாளில்
பற்றும் கரம் தள்ளிவிட்டு
பறந்தெங்கோ சென்று விட்டாய்..
தேடியே செல்லும் நாள்கள் எல்லாம்
வருடம்தனை கடந்த போதும்
தீராத காதல் இன்னும் குறையவில்லை...
என்றாவது ஒரு நாள்
நிச்சயமாய் வருவாய் ?!!?
அந்நாளில்
மொத்தமாய்
வாழ்ந்து விடுவேன்....
காற்றே புகாதபடி
இதயம் அணைத்திடுவேன்..
இதழ் பறிமாற்றம் வேண்டாம்
இனியாவது இதயத்தை
பறிமாறிக்கொள் என
ஆணையிடுவேன்....
காமம் தேடும் உலகில்
காதல் தேடி அலைந்து
ஏக்கத்தோடு காத்திருந்த
நெஞ்சத்துக்கு
கன்னம் பற்ற
கதகதப்பான
உள்ளங்கை போதும்.....
முகம் புதைத்து அழ
அகன்ற உன் மார்பில்
இதுவரைக் கொள்ளாத
உறக்கம் வேண்டும்..
தலையணையாய்
உன் கைகளுக்குள்
உன்னைப் போர்த்தி
நான் உறங்க வேண்டும்...
வந்துவிடேன் ஒரு முறை .....
No comments:
Post a Comment