Thursday, April 9, 2020

அவசரமாய் வேண்டும்

























அவசரமாய் வேண்டும்
அழுது புலம்ப
அரவணைத்து
ஆறுதல் பெற
அத்தனையும் கொட்டித் தீர்க்க
அன்னை மடியாய் ஓர் மடி....

நிம்மதியாய் உறங்கிய நாள்
நினைவில் இல்லை..
நினைவுகளைத் தவிர
நிஜமானதாய் எதுவுமில்லை
நித்தம் வரும் கனவுகளால்
நித்திரைக் கொள்ளவில்லை
நிதானமிழந்த மனம்
நிதர்சனம் புரிந்து
நிம்மதியின்றி தவிக்கிறது...

வயிறு நிறைய
ருசியாய் உணவும்
தலையணையாய் கைகளும்
முகம் புதைத்து அழ மார்பும்
உலத்தையே வென்ற திருப்தியாய்
நிம்மதியாய் கட்டியணைத்து
தூங்க
உண்மையாய் ஒர் இதயம் வேண்டும்

மார்பு முடிகளுக்கள் கைவிரல்
சிக்க வைத்து
விட்டு விலகி சென்றுவிடாத படி
இறுக அணைத்து
பெரும் துணை நீதானென்று
நிம்மதியாய் நீண்டதொரு உறக்கம் வேண்டும்

உண்மையாய் எனக்கே எனக்காய்
உண்மையான இதயம் வேண்டும்

No comments:

Post a Comment