Wednesday, April 4, 2012

என் காதலா ..















என் காதலை சொல்ல
ஒரு தினம் போதுமா
என் காதலா ..
உன்னைக் கொண்டாட
ஒரு தினம் போதுமா
காதலோடு காத்திருக்க
ஒரு தினம் போதுமா
தினம் தினம் வேண்டும்
உன்னோடு உண்டான
என் காதலை கொண்டாட
காதலர் தினம்....

காற்றாய் மாறி
காதலிக்க ஆசை
உன் மூச்சுக்காற்றாய்
உன் இதயத்தை
முத்தமிட ஆசை..

உன்னை நினையாமல்
ஒரு நாளும் முடிவதில்லை
உன்னை மறந்தாலே
என் உயிர்
எனக்கு சொந்தம் இல்லை...
என் அன்பில்
நிறமாற்றம் இல்லை.


கனவுகளில் நீ
விழித்திருக்கையில் நீ
நினைவுகளாய் நீ
உன் காதலில்
விழுந்ததால்
எனக்குள் எல்லாமே நீ

இமைக்கும் நொடியில்
உன்னை பார்க்க
தவறினும்

என் இதயபார்வையில்
ஒரு நொடியும் இமைக்காமல்
பார்த்து வருகிறேன்

பூக்கும் மலருக்கு
மரணம் ஒருநாள் தான்
நீ பேசாததால் தினமும்
மரித்து போகிறேன்

எனக்காக நீ
வரமாட்டாயென அறிந்து
நேரம் போவதை அறியாமல்
காத்திருக்கிறேன்...

என தலையணை அருகே
தொலைபேசியோடு
தவமிருப்பேன்
நீ அழைக்க மாட்டாய் என
அறிந்தும்..

உன்னையே நினைத்து
துடித்திருகிறேன்
நீ என்னை நினைக்கமட்டாய்
என அறிந்தும்..

எனக்காக நீயில்லை
என அறிந்தும்...
உனக்கவே காத்திருக்கிறேன்....

இவை வெறும் வரிகள் அல்ல
உன்னால் நான் படும் வலிகள்
காதல் வலிகள்... ♥

No comments:

Post a Comment