Wednesday, April 4, 2012

காதலோடு கண்ணீரையும்...














காதலை சொன்னாய்
காதலை தந்தாய்
நட்புக்குள் காதலா
கவலை கொண்டேன்
நட்போடு காதலும் என்றாய்...

காணும் கனவினில்
எல்லாம் உன் முகம் என்றேன்
கனவினிலும்
காதல் செய்வேன் என்றாய்
பேசும் வார்த்தைகள்
இனிமை என்றாய்....
பேசவைத்து பார்த்து ரசித்து
சிரித்து மகிழ்ந்தாய்...

கொஞ்சும் என் மொழி
மழலை என்றாய்
சிரிக்கும் என் ஒலி
கவிதை என்றாய்..
செய்யும் குறும்புகள்
பிடிக்கும் என்றாய்..

சின்ன கவிதைகள்
செல்ல சிணுங்கல்கள்
முத்த சத்தங்கள்
இதயத்தின் துடிப்புகள்
எல்லாம் கேட்கும் தருணம்
வேண்டும் என்பாய்

தேடும் கண்களை
தவிக்க வைப்பாய்
தீயாய் தீண்டலை
ரசிக்க வைப்பாய்
கொஞ்சி பேசி
சிலிர்க்க வைப்பாய்
துவளும் மனதை
துடிக்க வைப்பாய்....

காத்திருப்பது பிடிக்கதென்பேன்
காதலோடு காத்திரு
காத்திருப்பதை
மறப்பாய் என்றாய்

காத்திருக்கிறேன்
காதலோடு
மறந்தது நீயோ???

என் உறக்கம் மறந்தேன்
என் குறும்புகளை மறந்தேன்
என் சிரிப்பை மறந்தேன்
என் சினுங்களை மறந்தேன்
என் கவிதையை மறந்தேன்
என்னிடம் நீ ரசித்தவை
எல்லாம் மறந்தேன்
உன்னை மட்டுமே
மறக்க முடியாமல்...

காத்திருந்த கண்கள்
இன்று கண்ணீரில்..

என் கண்ணீரும்
பிடிக்குமோ?
சொல்லாமல்
சென்றுவிட்டாயே
சொல்லி இருந்தால்
கண்ணீரை பரிசளித்திருபேன்
காதலோடு கண்ணீரையும்....

No comments:

Post a Comment