Wednesday, April 4, 2012

சிதறிய சில்லில்















கண்ணாடி என் இதயம்
உன்னை மட்டுமே
காட்டுவேன் என்றேன்..

கண்ணாடி என்பதாலா
அதை நீ
உடைத்து எறிகிறாய்...

எத்தனை முறை
உடைத்தாலும்
உன்னை மட்டுமே
என் இதயம்
பிரதிபலித்து கொண்டே இருக்க
பாழும் இதயத்திற்கு அறியவில்லை
நீ உடைப்பதை அறியாமல்
சிதறிய சில்லில் கூட
உன்னைக் கண்டு
சிரித்து கொண்டிருகிறது

பூட்டிய இதயத்தில்
சுவாசமாய் நுழைந்தாய்
இன்று உன் இதயத்தை பூட்டி
எனக்கு மட்டும்
கதவடைப்பு செய்கிறாயே...

மறக்க நினைத்தேன்..
மறந்துவிட்டேன்
உன்னை மறைப்பதை..

நினைத்து துடிக்கும்
என் வேதனைக்கு
முற்றுபுள்ளி எப்போது..

உன் முத்தத்தில்
முடித்து வைப்பாயா
இல்லை
என் இதய சத்தத்தை
முடித்த பிறகா??

No comments:

Post a Comment