Wednesday, April 4, 2012

நிஜமான காதலை தந்துவிடு..















அந்தி பொழுதினில்
அழகிய நிலவொளியில்
அருகருகே நாம்
ஆனந்தமானது மனம்...

அர்த்தம் இல்லா பேச்சுக்களும்
ஆரவாரம் இல்லாத அமைதியும்
ஆயிரம் எண்ணங்களும்
ஆசை கனவுகளும்
அமுதமாய் கொஞ்சும் மொழிகளும்
அரவணைக்கும் தருணங்களும்
அனைத்தும் எனக்கே எனக்காக வேண்டி
ஆசைகளை சுமந்து உன்னோடு நான்..

உன் தோள் சாய்ந்து
உலகை மறக்க
உன்னை எண்ணியே
உன்னோடு என் கனவுகள் தொடர
உன் கண் பார்த்து கவலை மறந்து
உன்னில் என்னை தொலைத்து
உன் நேசத்தில்
உன்னோடு வாழந்த நினைவுகள்
எல்லாம் என் கண்முன்னே...

காலத்தின் சூழ்ச்சியா
என் பிறவியின் சாபமா??
உன்னை பிரிந்து
என் நாட்கள்
எல்லாம் நரகமாய்...

ஓவ்வொரு முறையும்
நிலவினில் தோன்றி
மறையும் முகமாய்
உன் முகம்..

நிலவே தேய்ந்து விடாதே
என்னவனை
உன்னில் கண்டுவரும்
என்னை தேம்ப விடாதே....

நிலவில்லா வானம்
அமாவாசையாம்
என்னவன்
இல்லா என் வாழ்வு
சூனியமாய்.....

நிலவினில் மட்டும்
நிழலாய் தெரியும் உன் முகம்
நிஜமாய் தெரியும் நாள் வரும்
நிழலாய் போனவனே
நிஜத்தில் வந்துவிடு...
நிஜமான காதலை தந்துவிடு..

நிலவில் வாசம் உனக்கெதற்கு
நிஜமாய் என்னுள் வசிப்பாய் எனில்
நிலவாய் நான் மாறிவிடவா...

நிலவை பார்த்திருக்கிறேன்
நீ வரும் வருகைக்காக காத்திருக்கிறேன்
நீ வந்தபின் என் பிரிவின்
வேதனையை தீர்த்துவிடு
அன்று மட்டும்
நிலவு தேய்ந்து போகட்டும்...

No comments:

Post a Comment