Wednesday, April 4, 2012

வரத்தை தந்துவிடு














எங்கோ அழகிய
பாடல் ஒலிக்க
பாடலின் வரிகளில்
உன்னோடு நான்..

நீ பாட நான்
கேட்ட பாடல்கள்
எல்லாம் நினைவில்
வந்து போக
மனம் கற்பனையில் மிதக்க
கொல்லாமல் கொல்கின்றாயே!

முத்தமிட்டு கொல்லும் வித்தை
கற்றவனோ?
முத்த சத்தத்தில் மூர்ச்சையாகி
உன்னை தேடியே
என் கற்பனை சிறகுகள் பறக்க
வா ஒருமுறை
காதல் வானில்
கவிதையாய் வாழ்ந்துவிடலாம்

யாருமில்லா உலகில்
உன்னருகில் நான் மட்டும்
எனக்காக நீ மட்டும்..
நினைக்கையில் இனிக்கும்
இனிமையான கற்பனை
நிஜத்தில் நிஜமாகும் நாள்
வர கூடுமோ??

முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும்
என்னோடு நீ வேண்டும்
பேராசையோ???
வேண்டாம் பேராசை....
ஒரே நாளில்
முன்னூற்று அறுபத்தைந்து நாள்
வாழ்கையை வாழ்ந்து விடுவோமே...

சூரியனுக்கு விடுமுறை
தந்துவிடு
நிலவின் துணையோடு
காதல் கவிதை எழுதிவிடு
நீ படிக்கும் கவிதையாய்
உனக்கே உனக்காக
நான் இருக்கும் வரத்தை
தந்துவிடு ♥ ♥

No comments:

Post a Comment