Monday, January 2, 2012

மறந்து போவாயோ





















வாசித்து பார்க்கிறேன்
உனக்காக நான் வரைந்த
கவிதையை

வாசித்து பார்க்கிறேன்
எனக்காக நீ வரைந்த
கவிதையை

வாசம் செய்தேன்
உன்னுள் நான் கவிதையாய்
என்னுள் நீ கவிதையாய்

மனதில் சிறு சலனம் இன்று
ஏன் இந்த இடைவெளி
தூரத்தில் இருந்தாலும்
நினைக்க வைத்தாய்
சில நொடிகள் துடிக்க வைத்தாய்

உன்னை நினைத்தே
என் நினைவுகள் சுழல
என்னை நினைக்காமல்
உன்னால் எப்படி இருக்கமுடிகிறது

உன் குரல் ஒலி
கேட்காத நாட்கள்
கூடிகொண்டே போக
மனதில் பாரம்
அதிகரிக்க
உன்னை நினைக்கும் பொழுதினில்
தானாக ஒலிக்கும்
என்றோ நீ பேசிய வார்த்தைகளின்
ஒலிப்பதிவு என் இதயத்தில்

உன் கொஞ்சல் வார்த்தைகளில்
வாழ்ந்து விட்டேன் உன்னோடு
கொஞ்சம் நீ மௌனித்திருந்தால்
தாளாத துன்பம் என்னோடு....

மறந்து போவாயோ
மறப்பதாய் இருந்தால் சொல்லிவிடு
மறைந்து போகிறேன்
உன்னை மறந்து அல்ல
உன் கண்ணைவிட்டு
மறைந்து போகிறேன்

1 comment:

  1. Arumailum arumai ungalathu kavithai unarvugalin prathipalippu.

    ReplyDelete