Monday, January 2, 2012

உன் ஒருவனுக்காகவே...



உன்னை நினைத்த
இதயம் இன்று
தனியே துடிக்க
காதலை சொல்ல
முனைந்த முயற்சிகளெல்லாம்
தோல்வியில் முடிய
சுவாசம் மறக்காமல்
உன்னை சுமந்த இதயத்தில்
இன்று ஏனோ சிறு பிளவு
உடைந்த போன இதயம்
தேடி துடிப்பது
உன்னை மட்டுமே

என்னை சுற்றி
வந்த உன்னை
பாராமுகமாய் இருந்ததால்
இன்று என்னை பார்க்காமல்
தவிக்க விட்டு
பாராமுகமாய்
இருப்பது முறையோ...

கோடி வார்த்தைகள்
நொடிக்கொருதரம்
பேசுபவள் இன்று
ஊமையாய்
உன் ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்

முள்ளாய் உதிர்த்த
உன் வார்த்தையால்
கிழிந்த என் இதயம்
உதிரம் சிந்த
உதிர்த்து விடு
ஒரு வார்த்தையை ...

காதல் எனும் ஊசியில்
நேசத்தை நூல்லாக்கி
உன் தீண்டலை மருந்தாக்கி
கிழிந்த இதயத்தை தைத்து விடு..

கிழிந்த இதயம்
மீண்டும் துடிக்க நினைப்பது
உன் ஒருவனுக்காகவே....

ஏற்றுக்கொள்
என் இதயத்தை
காதலை காதலாய்
தருகிறேன்...
என்னை விட உன்னை
உண்மையாய்
காதலிக்க யாரால் முடியும்?? ♥ ♥♥ ♥

No comments:

Post a Comment