Monday, January 2, 2012
இதயத்திற்கு நிரந்தரமாய்...
முள்வேலிக்குள்
என் இதயம்...
நெருங்க முடியாதென்றேன்
ஆணவம் வேண்டாமடி
உன்னை அடக்க-என்
அரை நொடி பார்வை
போதும் என்றாய்..
இன்று வரை உன்னைக்
கண்ணோடு கண்ணாக
பார்க்க முடியாமல் நான்...
உனக்கே அறியாமல்
உன்னை ரசித்தேன்...
என்னை அறியாமல்
உன்னில் விழுந்தேன்..
நீ சொன்னது நிஜமோ??
சுட்டி இழுக்கும்
உன் பார்வை வலையில்
விழுந்துவிடக் கூடாதென
தினமும் ஒரு
முகத்திரை எனக்கு...
நீ பார்க்காமலே
உன் கண்களுக்குள்
கைதியாய் நான்...
நொடிக்கு ஆயிரம் வார்த்தை
பேசுபவள்- இன்று
உன் முன் மட்டும்
ஊமையாய் வார்த்தையின்றி
தவிக்கிறேன்..
தமிழில் அத்தனை வார்த்தையும்
எனக்கு மட்டும் அந்நியமாய்
போனதோ....
ஒவ்வொரு முறையும்
நீ என்னை அழைக்கையில்
என் பெயரைக் கூட ரசிக்க
தொடங்கிவிட்டேன்...
உன் உதடு பட்டு
அழகாய் போனது என் பெயர்...
காதல் வந்தால் கவிதை வருமாம் ??
பைத்தியங்களின் உளறலென
கேலி செய்து கிண்டல் அடித்து
அழவைத்து பார்த்தேன்
என் தோழிகளை...
இன்று உனக்காக கவி
எழுத நினைத்தபோது
வார்த்தை பஞ்சம் எனக்கு...
காந்த பார்வை நீ வீசுகையில்
இரும்பு முள்வேலிக்கூட
என்னாகும்...
என்னை அறியாமல்
என் இதயத்தை இழந்தேன்...
என்னை இடமாற்றம்
செய்து விடு..
உன் கண்களில் இருந்து
இதயத்திற்கு நிரந்தரமாய்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment