Thursday, May 21, 2009

உன் அன்பான நட்பினால்....


நட்பு...
சந்தோஷங்களையும்
சோகங்களையும் பகிர
கிடைப்பது அரிது...
நம்பிக்கைக்குரிய நட்பு,
உண்மையான நட்பு,
உயர்வான நட்பு...
அறிந்ததில்லை நான்...
ஆனாலும் நான் தேடுவது
உண்மையான நட்பை...

தோழியே..
உன்னிடம் நான்
எதிர்பார்ப்பதும் இதை தான்...
உணர்வாயா என் உணர்வை...
நட்புக்குள் எதிர்பார்ப்பு
இருக்க கூடாதாம்.. ஆனாலும்
நான் எதிர்பார்க்கிறேன்
என் தோழியே॥
நீ என்றும்
என் நட்பாய் இரு...
என் சந்தோஷத்தில் பகிரும்
நீ என் துயரத்திலும்
துணை வருவாயா???
ஏமாற்றம் அடைந்தேன்
எல்லா நட்பிலும்....
ஏற்றம் கொடுத்தாய்
உன் அன்பான நட்பினால்....
உன் அன்பு மட்டுமே உண்மை.....
உணர்த்தேன் நான்
இன்று அது தான்
ஏமாற்றத்தை கூட
ஏற்கும் சக்தி கொடுத்தது.....

உண்மையான நட்பு
இவ்வுலகில் இல்லையடி தோழி....
உணர்ந்தேன் நான் உணர்வாயா நீ...
என் கண்ணீர் துடைக்க
உன் விரல் போதும்
என் துயர் எல்லாம் தூரம் போகும்!!!!

No comments:

Post a Comment