Thursday, May 21, 2009

சீக்கிரம் வந்திடு...!!


மந்திர புன்னகை
உன்னிடம் கண்டேன்....
உன் சிரிப்பினில்
உலகம் மறந்தேன்....
துயர் எல்லாம் தூரம்
நீ என் அருகில்
இருந்தால்.....
உன் நினைவுகள் எல்லாம்
நீங்காத வடுக்காளாய்
என் நெஞ்சில்.....
அன்பே...!!
நீ உணர்வாயா
உன்னால்
நான் நிலைகுலைந்து
போனதை....
கண்டும் காணாமல்
நீ!!
உன்னை காணமுடியாமல்
நான்....

சூரியன் காணாத தாமரை
போல்ஆனேன்॥!!!

உன் நேசம் முழுதும்

எனக்கே சொந்தம்

அதை முழுசாய்
எனக்கே தந்திடு
சீக்கிரம் வந்திடு!!!!

No comments:

Post a Comment