Thursday, May 19, 2011

கண்ணீர் சிந்த




என்னிடம் உனக்கு
காதல் இல்லை என்று
அறிந்த போது தான்
உன்னிடம் என் காதல்
அதிகமாகி போனதோ

சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை
நீ இருந்த போது
கண்ணீரின் அர்த்தம்
புரிந்தது
உன்னை பிரிந்த போது..

உன்னை நினைக்காமல்
இருக்க இயலாத
இதயத்தைப் போல
உன்னை பார்த்து செல்லும்
நொடிகளில் கண்ணீர் சிந்த
தவறுவதில்லை
விழிகள்....

2 comments: