Sunday, July 28, 2013

காத்திருக்கிறேன் காதலோடு..

















கவிதைகளின் வரிகளில்
வாழும் வார்த்தை நீ
என் உணர்வுகளின் துடிப்பில்
இயங்கும் இதயம் நீ
இனிக்க இனிக்க இனிமைத் தரும்
நினைவும் நீ.

நினைவுகளில் சுழற்சியில் நித்தமும்
தொடர்ந்து வரும் நிழலும் நீ..
கோபத்தில் திட்டினாலும்
புன்னகையால் இதயம் திருடும்
கள்வன் நீ..

மௌனமாகும் நொடிகளில்
மோகத் தீயை மூட்டும்
தணலும் நீ..
தணலை தகிக்க தணலாய் அணைத்து
குளுமை தரும் தென்றல் நீ..

வெட்கம் தந்து தலை குனிய
கண்சிமிட்டி பார்வையால்
களவாடும் கள்ளனே
உணராத காதலை
உணரவைத்து
தினம் தினம் உளற வைத்து
தூரமாய் இருந்து துடிக்க வைத்து
காத்திருப்பதும் சுகம் என்கிறாயே
காத்திருக்கிறேன்.

வாழாத எல்லா நொடிகளையும்
ஒரே நாளில் வாழ்ந்து முடித்திட
காத்திருக்கிறேன் காதலோடு..

1 comment: