பகலிரவாய் பாசத்தை
பக்குவமாய் தந்தவன்
தெரியாத காதலை
கவிதையாய் கற்றுத் தந்தவன்
உண்மைக் காதலை
முதல்முறையாய்
முழுதாய் தந்தவன்,
திகட்டாமல் காதலைத் தந்து
திணற வைத்தன்
ஓயாமல் உன் பெயரை
உளற வைத்தவன்.
எனக்கு எல்லாமுமாய்
இருந்தவன்..
கண் மூடி உறங்கையில்
உன் நினைவலைகள்
நெஞ்சத்தை அணைக்க
உன்னோடு உறங்குவதாய்
என்னை இழக்கிறேன்
எல்லா இரவுகளிலும்..
அழுகை மறந்தேன்
பெறும்துயரம் தனை
சுவடின்றி துறந்தேன்,
அளவில்லாமல்
அனைத்தும் தந்தாய்.
இன்று பிரிவையும்
அளவில்லாமல் தந்து
அனாதையாக்குகிறாய்,..
காதலைக் கற்றுத் தந்த நீ
அதை மறப்பதையும்
சொல்லித் தர மறந்தது ஏனோ,
நீ இல்லாத நாளெள்ளாம்
வாழ்வைத் தொலைத்த நாட்களாக
கண்ணீரோடு கடந்து வருகிறேன்.,
நீ வரும் நாள் பார்த்து
காத்திருக்கிறேன்
வந்து அணைத்துவிடு..
கொழுந்தாய் எறியும்
எந்தன் ஏக்கம் தனை தீர்க்க
ஒரே முறை அணைத்துவிடு ...
No comments:
Post a Comment